கோவை அருகே மூதாட்டியின் கழுத்தை நெரித்துக் கொன்று நகைகள் கொள்ளை!

கோவை அருகே மூதாட்டியை கழுத்தை நெரித்து கொன்று அவரிடம் இருந்த நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

கோவை: கோவை அருகே மூதாட்டியை கழுத்தை நெரித்து கொன்று அவரிடம் இருந்த நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

கோவை மாவட்டம், துடியலூர் அருகே பன்னிமடையில் முத்துலட்சுமி ( 72) என்ற மூதாட்டி தனியாக வசித்து வந்தார். அவருடைய மகன்கள், மகள் வெளியூரில் வசிக்கின்றனர். இவர்கள் தினமும் முத்துலட்சுமியின், மொபைல் போனில் தொடர்பு கொண்டு பேசுவது வழக்கம்.

அதைப்போல முத்துலட்சுமிக்கு நேற்று காலை வழக்கம்போல அவர்களது உறவினர்கள் மொபைலில் அழைத்துள்ளனர். ஆனால், முத்துலட்சுமி அவர்களின் அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதையடுத்து அவர்கள் அக்கம் பக்கத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். பக்கத்து வீட்டுக்காரர்கள்வந்து பார்த்தபோது, முத்துலட்சுமி காயங்களுடன் சடலமாக கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். அவர் அணிந்து இருந்த மூக்குத்தி, கம்மல் உள்ளிட்ட நகைகள் காணாமல் போயிருந்தன.

இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் மூதாட்டியின் உறவினர்களுக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

நகைக்காக, 'முத்துலட்சுமி கழுத்தை நெரித்து கொல்லப்பட்டிருக்கலாம்' என, போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...