அம்பேத்கர் அனைவருக்குமான தலைவர் என்றும் அவர் விசிகவுக்கு மட்டும் சொந்தமல்ல என்றும் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் உறுதிபடத்தெரிவித்துள்ளார்.
கோவை: அம்பேத்கர் அனைவருக்குமான தலைவர் என்றும் அவர் விசிகவுக்கு மட்டும் சொந்தமல்ல என்றும் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் உறுதிபடத்தெரிவித்துள்ளார்.
இது குறித்து கோவையில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அர்ஜூன் சம்பத்,
“அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த 14ம் தேதி சென்னையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் சென்னை அம்பேத்கர் மணி மண்டபத்திற்கு சென்று உள்ளனர்.
அப்போது அங்கிருந்த திராவிட கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி, பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட அமைப்பினர் இந்து மக்கள் கட்சியினர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க எதிர்ப்பு தெரிவித்தனர். எங்களை தாக்கவும் முயற்சி செய்தனர்.
மேலும், கடந்த ஆண்டு டிசம்பர் 6ம் தேதி அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த அம்பேத்கர் மணி மண்டபத்திற்கு சென்ற போதும் இதே போன்று எங்களை தாக்கி அவமானப்படுத்தினர்.
அம்பேத்கர் அனைவருக்குமான தலைவர் என்பதால் எங்களுக்கும் அம்பேத்கருக்கு மரியாதை செலுத்த உரிமை உண்டு, இது மாதிரியான அமைப்புகள் அம்பேத்கருக்கு ஒரு சாதி சாயம் பூசும் வேலையில் ஈடுபட்டு உள்ளன.
இந்து மக்கள் கட்சியினர் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தும் விசிக, திராவிட கழகம், பெரியார் திராவிடர் கழகம் போன்ற அமைப்புகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
இது குறித்து கோவையில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அர்ஜூன் சம்பத்,
“அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த 14ம் தேதி சென்னையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் சென்னை அம்பேத்கர் மணி மண்டபத்திற்கு சென்று உள்ளனர்.
அப்போது அங்கிருந்த திராவிட கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி, பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட அமைப்பினர் இந்து மக்கள் கட்சியினர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க எதிர்ப்பு தெரிவித்தனர். எங்களை தாக்கவும் முயற்சி செய்தனர்.
மேலும், கடந்த ஆண்டு டிசம்பர் 6ம் தேதி அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த அம்பேத்கர் மணி மண்டபத்திற்கு சென்ற போதும் இதே போன்று எங்களை தாக்கி அவமானப்படுத்தினர்.
அம்பேத்கர் அனைவருக்குமான தலைவர் என்பதால் எங்களுக்கும் அம்பேத்கருக்கு மரியாதை செலுத்த உரிமை உண்டு, இது மாதிரியான அமைப்புகள் அம்பேத்கருக்கு ஒரு சாதி சாயம் பூசும் வேலையில் ஈடுபட்டு உள்ளன.
இந்து மக்கள் கட்சியினர் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தும் விசிக, திராவிட கழகம், பெரியார் திராவிடர் கழகம் போன்ற அமைப்புகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.