இயற்கையின் காதலர் விவேக்குக்கு இயற்கையை காக்கும் இதய அஞ்சலி!

கோவை: இயற்கையின் காதலர் விவேக்குக்கு இயற்கையை காக்கும் இதய அஞ்சலி செலுத்துவதாக கோவை வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் நவீன் குமார் கூறியுள்ளார்.

கோவை: இயற்கையின் காதலர் விவேக்குக்கு இயற்கையை காக்கும் இதய அஞ்சலி செலுத்துவதாக கோவை வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் நவீன் குமார் கூறியுள்ளார்.



இது குறித்து அவர் கவிதை நடையில் வெளியிட்டுள்ள அஞ்சலி குறிப்பில், “ஒரு கோடி மரம் நடுவோம் என்ற கனவோடு பயணித்தார், பயணம் பாதியில் முடிந்த தேனோ, அடுத்த தலைமுறை இளைஞர்கள் இருக்கின்றோம் மிச்சம் இருக்கின்ற உந்தன் மரம் நடும் இலக்கை எட்டிப் பிடிப்பது தான் உங்களுக்கு அடுத்த தலைமுறை செய்கின்ற அஞ்சலியாக இருக்கும் என்ற எண்ணத்தோடு... இயற்கையைக் காக்கும் இதய அஞ்சலியாக மரம் நடுகிறோம்...

காற்றோடு கலந்துவிட்ட சின்ன கலைவாணரே தென்றலாய் மாறி இந்த பூமியில் வீசிக் கொண்டே இருங்கள். இதோ மரம் நடுகிறோம்.. சமூக அக்கறையும் முற்போக்கு சிந்தனையும் வளர்ந்து ஓங்கட்டும் இதோ மரம் நடுகிறோம்.



இதயம் நின்று போனாலும் இதயத்தில் எழுதிய உறவுகளுக்கு என்றும் அழிவில்லை காலமெல்லாம் நிலைத்திருக்கும், மரங்களாய் தொடர்ந்து கொண்டிருக்கும், இதோ மரம் நடுகிறோம்.

மிகச்சிறந்த மனிதநேயராக தாங்கள் எண்ணற்றோர்க்கு எண்ணிலடங்கா உதவிகளைச் செய்த கருனை உள்ளம் அடுத்த தலைமுறைக்கு வழிகாட்டும் பூத்துக் காய்கட்டும். இதோ மரம் நடுகிறோம்.



கலைத்துறையில் முற்போக்குசிந்தனை கொண்ட நகைச்சுவை நாயகன், இயற்கையை காக்க கலாம் தேர்ந்தெடுத்த கதாநாயகன், காலம் ஏமாற்றும் என்று கனவா கண்டோம், லட்சக்கணக்கான இளைஞர்கள் எதிர்கால சிந்தனை உடையவர்கள் உங்கள் கனவை நிறைவேற்றுவோம்,

இதோ மரம் நடுகிறோம்.. இயற்கை அஞ்சலி செலுத்துகிறோம்,”என தெரிவித்துள்ளார்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...