கோவை-திருச்சி சாலை மேம்பால பணிகள் 80 சதவீதம் நிறைவு!

கோவை: கோவை-திருச்சி சாலை மேம்பால பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்து விட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.



கோவை: கோவை-திருச்சி சாலை மேம்பால பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்து விட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

கோவை திருச்சி சாலையில் ரெயின்போ பகுதியில் துவங்கி பங்கு சந்தை வரை 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.250 கோடி செலவில் மேம்பாலம் கட்டும் பணி கடந்த 2019ம் ஆண்டு தொடங்கியது. இந்த மேம்பாலம் 4 வழிப்பாதையாக 17.20 மீட்டர் அகலத்தில் அமைக்கப்படுகிறது. இதில் சுங்கம் பகுதியில் மட்டும் மேம்பாலத்தின் அகலம் 19.60 மீட்டராக உள்ளது.

மேம்பாலம் கட்டும் பணி கடந்த ஆண்டு ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் கொரோனா முழு ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டது. அதன்பின்னர் விரைவாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது மேம்பாலத்தின் 80 சதவீத பணிகள் நிறைவடைந்து விட்டன. மேம்பாலத்தின் இருபுறமும் இறங்கு தளம் அமைக்கும் பணி, சுங்கம் பகுதியில் 19.60 மீட்டர் அகலத்திற்கு மேம்பாலம் அமைக்கும் பணியும் தற்போது நடந்து வருகிறது.

இதுகுறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘கோவை- திருச்சி சாலையில் சிங்காநல்லூரில் இருந்து வரும் வாகனங்கள் உக்கடம் வழியாக பொள்ளாச்சி, கேரளா செல்ல வசதியாக சுங்கம்-உக்கடம் சாலையில் 400 மீட்டர் தூரத்திற்கு இறங்கு தளம் அமைக்க திட்டமிடப்பட்டது.

இதற்காக கான்கிரீட் தூண்கள் அமைக்கும் பணி நிறைவடைந்து விட்டது. 2 வாகனங்கள் செல்லும் வகையில் 8.50 அகலத்தில் இந்த இறங்குதளம் அமைக்கப்படுகிறது. இந்த பணி முடிந்ததும் மேம்பாலத்தின் கீழே சர்வீஸ் சாலைகள் அமைக்கும் பணி நடைபெறும்.மேம்பால பணிகள் அனைத்தும் இன்னும் 3 மாதத்தில் முடிக்கப்பட்டு விரைவில் பயன்பாட்டுக்கு திறக்கப்படும்,” என்று கூறினர்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...