கோவை: பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் தமிழக விலங்காக கருதப்படும் வரையாடுகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது. இதில் 100க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள் பங்கேற்றனர்.
கோவை: பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் தமிழக விலங்காக கருதப்படும் வரையாடுகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது. இதில் 100க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள் பங்கேற்றனர்.
பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் காட்டு யானை, சிங்கவால் குரங்கு, சிறுத்தை, காட்டு மாடுகள் இருந்து வருகிறது. குறிப்பாக, தமிழகத்தின் விலங்காக கருதப்படும் வரையாடுகள் அதிகமாக உள்ளது.
இந்நிலையில், மலை பாறைகளுக்கு நடுவே வாழ்ந்து வரும் வரையாடுகளின் கணக்கெடுக்கும் பணி இன்று தொடங்கி மூன்று நாட்களுக்கு நடைபெறுகிறது.

பொள்ளாச்சி, வால்பாறை, உலாந்தி, மானாம்பள்ளி ஆகிய நான்கு வன சரகங்களை 21 பகுதிகளாக பிரித்து நூற்றுக்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள் இந்த கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், இன்று காலை பொள்ளாச்சி வனச்சரகத்திற்கு உட்பட்ட வரையாடுகள் அதிகம் வாழும் இடமான அட்டகட்டி பகுதியில் வனத்துறை ஊழியர்கள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர்
அப்போது, வரையாடுகள் வாழும் இடத்தின் பரப்பளவு, வரையாடுகள் எச்சம், வரையாடுகளின் எண்ணிக்கை ஆகியவை கண்டெடுக்கப்பட்டது. மேலும் ஜிபிஎஸ் கருவி மூலம் வரையாடுகள் அதிகம் வாழும் பகுதி பதிவு செய்யப்பட்டது.
சுமார் 3 நாட்கள் நடைபெறும் இந்த கணக்கெடுப்பு பணி முடிந்த பிறகு இந்த அறிக்கையை இயற்கை உலகளாவிய நிதியத்திடம் ஒப்படைக்கப்படும் என்றும் வனத்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் காட்டு யானை, சிங்கவால் குரங்கு, சிறுத்தை, காட்டு மாடுகள் இருந்து வருகிறது. குறிப்பாக, தமிழகத்தின் விலங்காக கருதப்படும் வரையாடுகள் அதிகமாக உள்ளது.
இந்நிலையில், மலை பாறைகளுக்கு நடுவே வாழ்ந்து வரும் வரையாடுகளின் கணக்கெடுக்கும் பணி இன்று தொடங்கி மூன்று நாட்களுக்கு நடைபெறுகிறது.
பொள்ளாச்சி, வால்பாறை, உலாந்தி, மானாம்பள்ளி ஆகிய நான்கு வன சரகங்களை 21 பகுதிகளாக பிரித்து நூற்றுக்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள் இந்த கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், இன்று காலை பொள்ளாச்சி வனச்சரகத்திற்கு உட்பட்ட வரையாடுகள் அதிகம் வாழும் இடமான அட்டகட்டி பகுதியில் வனத்துறை ஊழியர்கள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர்
அப்போது, வரையாடுகள் வாழும் இடத்தின் பரப்பளவு, வரையாடுகள் எச்சம், வரையாடுகளின் எண்ணிக்கை ஆகியவை கண்டெடுக்கப்பட்டது. மேலும் ஜிபிஎஸ் கருவி மூலம் வரையாடுகள் அதிகம் வாழும் பகுதி பதிவு செய்யப்பட்டது.
சுமார் 3 நாட்கள் நடைபெறும் இந்த கணக்கெடுப்பு பணி முடிந்த பிறகு இந்த அறிக்கையை இயற்கை உலகளாவிய நிதியத்திடம் ஒப்படைக்கப்படும் என்றும் வனத்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.