பொள்ளாச்சியில் மினி கொடிசியா..! கொரோனா தொற்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 600 படுக்கைகள் தயார்!

கோவை: பொள்ளாச்சியில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க கொடிசியாவை போல 600 படுக்கைகளுடன் தயார் நிலையில் சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. ஏற்பட்டது.


கோவை: பொள்ளாச்சியில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க கொடிசியாவை போல 600 படுக்கைகளுடன் தயார் நிலையில் சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி பகுதியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டு வருகிறது. நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பொள்ளாச்சி அரசு மருத்துவமனை, நாச்சிமுத்து பிரசவ விடுதி உள்ளிட்ட மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், கோவை மருத்துவமனைக்கும் நோயாளிகள் அழைத்துச் செல்லப்படுகின்றனர்.

இந்நிலையில், பொள்ளாச்சி, ஆனைமலை சுற்றுவட்டாரப் பகுதியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவதால், புளியம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் கோவையில் உள்ள கொடிசியாவை போல் 600 படுக்கை வசதிகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையம் தயார் நிலையில் உள்ளது.



இந்த நிலையில், இன்று சிகிச்சை மையத்தை சார் ஆட்சியர் வைத்தியநாதன் உள்ளிட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். நோய் பாதிப்பு குறைவாக உள்ள நோயாளிகளை கோவை கொடிசியாவுக்கு அனுப்புவதற்கு பதிலாக இங்கேயே அவர்களுக்கு அனைத்து வகையான சிகிச்சையை அளிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், உணவு, மருந்துகள், கபசுரக் குடிநீர், சித்தா மருத்துவ முறை, மற்றும் யோகா பயிற்சிகள் நோயாளிகளுக்கு வழங்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...