கோவை விமான நிலையத்தில் ஊழியர்கள், பிரீபெய்டு டாக்ஸி ஓட்டுனர்கள் உள்ளிட்ட 250க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி!

கோவை: கோவை விமான நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்கள், ப்ரீபெய்ட் டாக்ஸி ஓட்டுனர்கள் உள்ளிட்ட 250க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.


கோவை: கோவை விமான நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்கள், ப்ரீபெய்ட் டாக்ஸி ஓட்டுனர்கள் உள்ளிட்ட 250க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இது குறித்து கோவை ஏர்போர்ட் டூரிஸ்ட் டாக்ஸி டிரைவர் மற்றும் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் பி. கார்த்திகேயன் கூறுகையில், "௭ங்கள் சங்கத்தில் 100க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். நோய்தொற்று வேகமாக பரவி வருவதை அடுத்து அரசு வழிகாட்டுதலின்படி நேற்று விமான நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் ப்ரீபெய்ட் டாக்ஸி மற்றும் டூரிஸ்ட் டாக்ஸி ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.



ஏர்போர்ட் வளாகத்தில் நேற்று நடந்த சிறப்பு முகாமில் 250க்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. தற்பொழுது ஏர்போர்ட்டில் வெளிநாட்டு விமான சேவை பிரிவில் ஷார்ஜாவுக்கு மட்டும் விமான சர்வீஸ் வழங்கப்படுகிறது. உள்நாட்டு பிரிவில் பல்வேறு நகரங்களுக்கு சேவை வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும் கோவை விமான நிலையத்தில் இயக்கப்படும் அனைத்து ப்ரீபெய்ட் டாக்ஸி மற்றும் டூரிஸ்ட் டாக்ஸி ஓட்டுனர்கள் அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வருகின்றனர்," இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...