கோவை கிணத்துக்கடவில் மரக்கன்றுகள் நடவு செய்து மறைந்த நடிகர் விவேக்குக்கு வருவாய்த்துறை ஊழியர்கள் அஞ்சலி!

கோவை கிணத்துக்கடவில் மரக்கன்றுகள் நடவு செய்து மறைந்த நடிகர் விவேக்குக்கு வருவாய்த்துறை ஊழியர்கள் அஞ்சலி செலுத்தினர்.


கோவை: கோவை கிணத்துக்கடவில் மரக்கன்றுகள் நடவு செய்து மறைந்த நடிகர் விவேக்குக்கு வருவாய்த்துறை ஊழியர்கள் அஞ்சலி செலுத்தினர்.

சின்ன கலைவாணர் என்று அழைக்கப்படும் நடிகர் விவேக் மாரடைப்பால் இன்று அதிகாலை 4 35 மணிக்கு மரணம் அடைந்தார். நடிகர் விவேக் மரணமடைந்த செய்தி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், மறைந்த நடிகர் விவேக்கின் இலட்சியமான ஒரு கோடி மரக்கன்று நடும் முயற்சி தொடரும் விதமாக ரசிகர்கள் மரக்கன்றுகளை நடவு செய்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, கிணத்துக்கடவு பழைய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலகம் வளாகத்தில் கிராம நிர்வாக ஊழியர்கள் பத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நடவு செய்து மறைந்த நடிகர் விவேக்கிற்கு அஞ்சலி செலுத்தினர்.

மறைந்த விவேக்கின் லட்சியமான மரக்கன்றுகளை நடவு செய்து அவரது ஆத்மா சாந்தியடை செய்வது அனைவரது கடமை என்றும் வருவாய்த்துறை ஊழியர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...