கோவை: வால்பாறை நகராட்சி ஆணையாளராக பணிபுரிந்து வந்த பவுன்ராஜ், தேர்தல் தேதி அறிவித்த பிறகு தேர்தல் விதிமுறையை மீறி அதிமுக பிரமுகருக்கு 12 கோடி மதிப்பிலான ஏலத்தை வழங்கி அதன் மூலமாக கோடிக்கணக்கில் கமிஷன் பெற்றுள்ளார், என முன்னாள் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ., ஆறுமுகம் தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு புகார் கடிதம் அனுப்பி இருந்தார். புகாரின் அடிப்படையில், அவரை பணி மாற்றம் செய்து மாவட்ட கலெக்டர் உத்தரவு பிறப்பித்திருந்தார்.
கோவை: வால்பாறை நகராட்சி ஆணையாளராக பணிபுரிந்து வந்த பவுன்ராஜ், தேர்தல் தேதி அறிவித்த பிறகு தேர்தல் விதிமுறையை மீறி அதிமுக பிரமுகருக்கு 12 கோடி மதிப்பிலான ஏலத்தை வழங்கி அதன் மூலமாக கோடிக்கணக்கில் கமிஷன் பெற்றுள்ளார், என முன்னாள் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ., ஆறுமுகம் தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு புகார் கடிதம் அனுப்பி இருந்தார். புகாரின் அடிப்படையில், அவரை பணி மாற்றம் செய்து மாவட்ட கலெக்டர் உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இந்த நிலையில், கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், பவுன்ராஜ் மீது மோசடி வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர். நேற்று மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் வால்பாறை நகராட்சியில் பணியாற்றிக் கொண்டிருந்த அலுவலர்களை வெளியே அனுப்பி விட்டு, பவுன்ராஜின் அறையை சோதனை செய்தனர். அப்போது, பல்வேறு ஆவணங்களை கைப்பற்றி சென்றனர்.
இந்த நிலையில், இன்று கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் 14 |2021, 408 420 ஆகிய சட்டப் பிரிவின் கீழ் பவுன்ராஜ் மீது வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றன. ஆனால், பவுன்ராஜ் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாகவே விடுமுறை எடுத்து விட்டு சொந்த ஊருக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது. தற்போது, போலீசார் அவரை வலைவீசி தேடிவருகின்றனர்.
வால்பாறை முன்னாள் எம்.எல்.ஏ., ஆறுமுகம் அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-தேர்தல் தேதி அறிவித்த பிறகு தேர்தல் விதிமுறையை மீறி அதிமுக பிரமுகருக்கு 12 கோடி மதிப்பிலான ஏலத்தை வழங்கி அதன் மூலமாக கோடிக்கணக்கில் கமிஷன் பவுன்ராஜ் பெற்றுள்ளார். இது தேர்தல் விதிமீறல் ஆகும். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அந்த மனுவின் அடிப்படையிலேயே தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவின்பேரில் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், போலீசார் ஆய்வில் ஈடுபட்டபோது இவர் குற்றத்தில் ஈடுபட்ட அதற்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
வால்பாறையில் உள்ள நகராட்சியில் நேற்று புதிய ஆணையாளராக பொள்ளாச்சி நகராட்சி ஆணையாளராக பணிபுரிந்துவந்த காந்திராஜன் பொறுப்பேற்றார். மேலும், அவர் அலுவலகத்தில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் சமந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு ஆய்வுக்காக அனுப்பப்படும் என்றும் ஆய்வின் முடிவில் தான் குற்றத்தின் முழு தன்மையும் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், பவுன்ராஜ் மீது மோசடி வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர். நேற்று மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் வால்பாறை நகராட்சியில் பணியாற்றிக் கொண்டிருந்த அலுவலர்களை வெளியே அனுப்பி விட்டு, பவுன்ராஜின் அறையை சோதனை செய்தனர். அப்போது, பல்வேறு ஆவணங்களை கைப்பற்றி சென்றனர்.
இந்த நிலையில், இன்று கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் 14 |2021, 408 420 ஆகிய சட்டப் பிரிவின் கீழ் பவுன்ராஜ் மீது வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றன. ஆனால், பவுன்ராஜ் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாகவே விடுமுறை எடுத்து விட்டு சொந்த ஊருக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது. தற்போது, போலீசார் அவரை வலைவீசி தேடிவருகின்றனர்.
வால்பாறை முன்னாள் எம்.எல்.ஏ., ஆறுமுகம் அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-தேர்தல் தேதி அறிவித்த பிறகு தேர்தல் விதிமுறையை மீறி அதிமுக பிரமுகருக்கு 12 கோடி மதிப்பிலான ஏலத்தை வழங்கி அதன் மூலமாக கோடிக்கணக்கில் கமிஷன் பவுன்ராஜ் பெற்றுள்ளார். இது தேர்தல் விதிமீறல் ஆகும். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அந்த மனுவின் அடிப்படையிலேயே தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவின்பேரில் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், போலீசார் ஆய்வில் ஈடுபட்டபோது இவர் குற்றத்தில் ஈடுபட்ட அதற்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
வால்பாறையில் உள்ள நகராட்சியில் நேற்று புதிய ஆணையாளராக பொள்ளாச்சி நகராட்சி ஆணையாளராக பணிபுரிந்துவந்த காந்திராஜன் பொறுப்பேற்றார். மேலும், அவர் அலுவலகத்தில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் சமந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு ஆய்வுக்காக அனுப்பப்படும் என்றும் ஆய்வின் முடிவில் தான் குற்றத்தின் முழு தன்மையும் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.