கோவை: கிணத்துக்கடவு பகுதியில் 200க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
கோவை: கிணத்துக்கடவு பகுதியில் 200க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், நோய் தொற்றின் பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதனிடையே, 45 வயதுக்கு மேல் உள்ளவர்கள் தனியார் மற்றும் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தி வருகிறது.
அதன்படி, கிணத்துக்கடவு தாலுகா பகுதிகளில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

கிணத்துக்கடவு அருகே உள்ள கோதவாடி பகுதியில் உள்ள எல்.ஜி தொழிற்சாலையில் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. தொழிற்சாலையில் பணியாற்றி வரும் 45 வயதுடையவர்களுக்கு முகாமில் தடுப்பூசி போடப்பட்டது.

இதேபோல் நல்லட்டிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நூறுக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. இன்று மட்டும் கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் 200க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது என சுகாதாரத் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், நோய் தொற்றின் பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதனிடையே, 45 வயதுக்கு மேல் உள்ளவர்கள் தனியார் மற்றும் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தி வருகிறது.
அதன்படி, கிணத்துக்கடவு தாலுகா பகுதிகளில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
கிணத்துக்கடவு அருகே உள்ள கோதவாடி பகுதியில் உள்ள எல்.ஜி தொழிற்சாலையில் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. தொழிற்சாலையில் பணியாற்றி வரும் 45 வயதுடையவர்களுக்கு முகாமில் தடுப்பூசி போடப்பட்டது.
இதேபோல் நல்லட்டிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நூறுக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. இன்று மட்டும் கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் 200க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது என சுகாதாரத் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.