கோவை: தான் வேலை பார்த்த நகைக்கடையில் பணத்தை கையாடல் செய்த கேஷியரை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை: தான் வேலை பார்த்த நகைக்கடையில் பணத்தை கையாடல் செய்த கேஷியரை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை கிராஸ்கட் ரோட்டில் உள்ள நகைக்கடையில் கல்வீரம்பாளையம் விஜய் நகரை சேர்ந்த பாபு ராஜன் என்பவர் கடந்த இரண்டு வருடங்களாக டிரைவராக பணிபுரிந்து வந்தார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு கேஷியராக பதவி உயர்வு அளிக்கப்பட்டது. இந்த நிலையில் நகைக் கடையில் விற்பனையாகும் பணத்தை விட பாபு ராஜன் கணக்கு காண்பிக்கும் பணம் குறைவாக இருந்ததாகத் தெரிகிறது
இதையடுத்து நகைக்கடையின் மேலாளர் ஸ்டான்லி மேத்யூ, பாபு ராஜனை கண்காணித்து வந்தார். பாபு ராஜன் பணத்தை கையாடல் செய்தது உறுதியானது.
இதுகுறித்து பாபு ராஜனிடம் ஸ்டான்லி மேத்யூ கேட்டார். ஆனால், அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தார். பின்னர் கடைக்குவருவதை நிறுத்திக் கொண்டார்.
பாபுராஜன் ரூ. 51450 வரை கையாடல் செய்தது தெரியவந்தது. இதுகுறித்து மேலாளர் ஸ்டான்லி கொடுத்த புகாரின் அடிப்படையில் காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை கையாடல் செய்த பாபுராஜை தேடி வருகின்றனர்
கோவை கிராஸ்கட் ரோட்டில் உள்ள நகைக்கடையில் கல்வீரம்பாளையம் விஜய் நகரை சேர்ந்த பாபு ராஜன் என்பவர் கடந்த இரண்டு வருடங்களாக டிரைவராக பணிபுரிந்து வந்தார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு கேஷியராக பதவி உயர்வு அளிக்கப்பட்டது. இந்த நிலையில் நகைக் கடையில் விற்பனையாகும் பணத்தை விட பாபு ராஜன் கணக்கு காண்பிக்கும் பணம் குறைவாக இருந்ததாகத் தெரிகிறது
இதையடுத்து நகைக்கடையின் மேலாளர் ஸ்டான்லி மேத்யூ, பாபு ராஜனை கண்காணித்து வந்தார். பாபு ராஜன் பணத்தை கையாடல் செய்தது உறுதியானது.
இதுகுறித்து பாபு ராஜனிடம் ஸ்டான்லி மேத்யூ கேட்டார். ஆனால், அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தார். பின்னர் கடைக்குவருவதை நிறுத்திக் கொண்டார்.
பாபுராஜன் ரூ. 51450 வரை கையாடல் செய்தது தெரியவந்தது. இதுகுறித்து மேலாளர் ஸ்டான்லி கொடுத்த புகாரின் அடிப்படையில் காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை கையாடல் செய்த பாபுராஜை தேடி வருகின்றனர்