ஆலை அரவைக்கு கரும்பு வழங்கும்படி அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை கோரிக்கை!

கோவை: இந்த ஆண்டுக்கான ஆலை அரவைக்கு போதுமான கரும்பை வழங்கும்படி விவசாயிகளுக்கு அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை கோரிக்கை விடுத்துள்ளது.


கோவை: இந்த ஆண்டுக்கான ஆலை அரவைக்கு போதுமான கரும்பை வழங்கும்படி விவசாயிகளுக்கு அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை கோரிக்கை விடுத்துள்ளது.

உடுமலைப்பேட்டை அருகே உள்ள கிருஷ்ணாபுரத்தில் உள்ள அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கடந்த ஆண்டு ஏற்பட்ட பல்வேறு நிர்வாக குளறுபடிகளால் கரும்பு அரவை குறைந்து விட்டது.

இந்த ஆண்டு ஆலையை சுற்றியுள்ள கிராமங்களில் சுமார் 10 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமாக கரும்பு பயிரிடப்பட்டுள்ளது. ஆனால், இந்த ஆண்டு ஆலைக்கு கரும்பு வழங்க குறைந்த அளவு விவசாயிகளே முன்வந்துள்ளனர்.

இந்த நிலையில் ஆலை நிர்வாகம் விடுத்துள்ள வேண்டுகோளில், “இதுவரை 3500 ஏக்கர் அளவிலான கரும்பு மட்டுமே அரவைக்கு தருவதாக ஆலையுடன் விவசாயிகள் ஒப்பந்தம் செய்துள்ளனர். அரவை திறன் குறைந்தால் அது நஷ்டமான ஆலை எனக்கருதி மத்திய அரசு கைவிட வாய்ப்புள்ளது.



இரண்டு லட்சம் டன் அரவை திறன் கொண்ட இந்த ஆலையில் இந்த ஆண்டு ஒரு லட்சம் டன் அரவை என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த இலக்கை பூர்த்தி செய்யும் வகையில் விவசாயிகள் தாங்களாகவே முன்வந்து ஆலைக்கு தங்களது கரும்பை வழங்க வேண்டும்.



இந்த ஆண்டு கரும்புக்கான பணத்தை கோவை மத்திய கூட்டுறவு வங்கி மூலம் விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.2,900 வரை வழங்கப்படும்,” என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...