கேஎம்சிஎச் சார்பில் ''முதியோர் மறுவாழ்வு'' மற்றும் ''விளையாட்டு மறுவாழ்வு'' கருத்தரங்கம்

கோவை மெடிக்கல் சென்டர் மற்றும் மருத்துவமனை உடற்பயிற்சிக் கல்லூரியின் சார்பில் 1994ம் ஆண்டு உடற்பயிற்சி இளங்கலை பட்டப் படிப்பை அறிமுகம் செய்தது. அதன் வெற்றியைத் தொடர்ந்து 1999ம் ஆண்டு உடற்பயிற்சி முதுகலை பட்டப் படிப்பையும் மற்றும் 2006ம் ஆண்டில் தொழில் சார்ந்த தொடர் வளர்ச்சி திட்டத்தையும் அறிமுகப்படுத்தியது.



உடற்பயிற்சித் துறையில் ஏற்பட்டு வரும் முன்னேற்றங்களைப் பற்றி மாணவர்கள் தெரிந்துகொள்வதற்காக கேஎம்சிஎச் உடற்பயிற்சிக் கல்லூரி இடைவிடாத முயற்சியை மேற்கொண்டு வருகிறது. 

தொழில் சார்ந்த தொடர் வளர்ச்சி திட்டம் 100-வது முறை நடத்தப்பட்டதைக் கொண்டாடிட ''விளையாட்டு மறுவாழ்வு'' என்ற தலைப்பில் நவம்பர் 18ம் தேதி ஒரு பயிலரங்கமும், ''முதியோர் மறுவாழ்வு'' என்ற தலைப்பில் நவ. 19ம் தேதியன்று ஒரு தேசிய அளவிலான கருத்தரங்கும் நடைபெற்றது.

இந்த தேசிய கருத்தரங்கு மற்றும் பயிலரங்கை கேஎம்சிஎச் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் நல்ல ஜி.பழனிசாமி துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

கேஎம்சிஎச் ஆராய்ச்சி மையம் மற்றும் கல்வி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் மருத்துவர் தவமணி டி.பழனிசாமி, கேஎம்சிஎச் மருத்துவமனை இயக்குநர் அருண் என்.பழனிசாமி, கேஎம்சிஎச் முதல்வர் வி.குமரன், தலைமை செயல் அலுவலர் புவனேஸ்வரன் உள்ளிடோர் பங்கேற்றனர்.

இதனைத்தொடர்ந்து, 100-வது தொழில் சார்ந்த தொடர் வளர்ச்சி திட்டத்தை குறிக்கும் வகையில் ''Souvenir 16'' என்ற நூலை நல்ல ஜி.பழனிசாமி வெளியிட்டார்.

Newsletter

CII பெண்கள் பிரிவு கோவை மண்டலத்தில் ப்ரீத்தா பிரியதர்ஷினி நாயுடு புதிய Convenor ஆக தேர்வு

கோவையில் நடந்த இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் பெண்கள் பிரிவு ஆண்டு விழாவில் Richmond Talent Solutions நிறுவனர் ப்ரீத்தா...

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம்: கோவை-அபுதாபி விமான சேவை மார்ச் 28 வரை ரத்து

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக கோவை விமான நிலையத்தில் இருந்து அபுதாபிக்கு செல்லும் இண்டிகோ விமான சேவை மார்ச் 28 வரை...

மின்கட்டண குறைப்பு வாக்குறுதி தேர்தல் வெற்றியின் திறவுகோல் - தொழில் துறையினர்

சட்டமன்ற தேர்தலில் மின்கட்டண குறைப்பு வாக்குறுதி அரசியல் கட்சிகளின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிக்கும் என கோவை தொழில் து...

50 ஆண்டுகள் அன்பின் சுவை: ரமலான் திருநாளில் பிரியாணி வழங்கும் இஸ்லாமிய குடும்பம்

திருப்பூரில் பாத்திமாபீவி குடும்பம் கடந்த 50 ஆண்டுகளாக ரமலான் திருநாளில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பிரியாணி தயாரி...

கோவை இடையர் வீதியில் விபசார வலையில் மூதாட்டி உள்பட மூவர் கைது

கோவை இடையர் வீதி பகுதியில் வீட்டில் விபசாரம் நடத்திய சம்பவத்தில் வெரைட்டி ஹால் ரோடு போலீசார் ரகசிய தகவலின் பேரில் சோதனை...

சூலூரில் தேர்தல் விதிமுறை மீறல்: 800 அண்டாக்கள் பறிமுதல் - பறக்கும் படை அதிரடி

சூலூர் இருகூர் பேரூராட்சியில் தேர்தல் விதிமுறைகளை மீறி அரசியல் கட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த 800 சில்வர் அண்டாக்கள் ம...