கோவை மாநகரில் கூடுதலாக நான்கு காவல் நிலையம் அமைக்க பரிந்துரை - காவல்துறை ஆணையர் தகவல்!

கோவை: கோவை மாநகரில் கூடுதலாக நான்கு காவல் நிலையம் அமைக்க பரிந்துரை செய்யப்பட உள்ளதாக, காவல்துறை ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் தெரிவித்தார்.


கோவை: கோவை மாநகரில் கூடுதலாக நான்கு காவல் நிலையம் அமைக்க பரிந்துரை செய்யப்பட உள்ளதாக, காவல்துறை ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் தெரிவித்தார்.

கோவையில் மாநகரில் 15 காவல் நிலையங்கள் உள்ளன. அதேசமயம், தொடர்ந்து குற்றங்கள் அதிகரித்து வருகிறது. மேலும், போக்குவரத்து அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், கோவை மாநகரில் கூடுதலாக நான்கு போலீஸ் ஸ்டேஷன்களை அமைக்க பரிந்துரை செய்யப்பட உள்ளதாக, காவல்துறை ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் தெரிவித்தார்.

இதுகுறித்து, அவர் கூறுகையில், ''பீளமேடு, சிங்காநல்லூர், சரவணம்பட்டி, போத்தனுார் ஆகிய நான்கு போலீஸ் ஸ்டேஷன்கள் பிரிக்கப்பட்டு, கூடுதலாக அந்தந்த பகுதிகளில், 4 போலீஸ் ஸ்டேஷன்கள் அமைக்க, தமிழக டி.ஜி.பி.,க்கு பரிந்துரை செய்யப்பட உள்ளது. இதற்கான திட்ட வரைவு தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அரசின் ஒப்புதலுக்கு, இந்த பரிந்துரை அனுப்பப்பட்டு, புதிய போலீஸ் ஸ்டேஷன்கள் அமைக்க, நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்று தெரிவித்தார்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...