கோவை: கோவை சிட்கோ தொழில் வளாகத்தில் பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றும் 300 தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
கோவை: கோவை சிட்கோ தொழில் வளாகத்தில் பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றும் 300 தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், மீண்டும் முழுமையான ஊரடங்கு கொண்டு வரப்படுமோ என்ற அச்சத்தில் கோவையில் பணியாற்றி வரும் வட மாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஆயத்தமாகினர்.
இதனால் கோவையில் உள்ள தொழில் அமைப்பினர் மாவட்ட நிர்வாகத்துடன் இது குறித்து ஆலோசனை மேற்கொண்டனர். அதன்படி தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தடுப்பூசி முகாம் நடத்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது.
அதன் ஒரு பகுதியாக கோவை சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நேற்று தொடங்கியது.
சிட்கோ தொழில் மையம், மாவட்ட தொழில் மையம் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்துடன் இணைந்து சிட்கோவில் உள்ள கொசிமா அரங்கில் நடந்த முகாமில் முதல் நாளில் 233 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
மேலும் இன்று முதல் 500 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டது. ஆனால், போதுமான தடுப்பூசி இருப்பு இல்லாததால், 300 பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டது. மேலும் சிறிய தொழிற்சாலைகளில் பணியாற்றும் ஊழியர்கள் உரிமையாளர்கள் வாயிலாக கொசிமா சங்கம் மூலம் பதிவு செய்து கொண்டு தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.