கோவையில் விபத்தில் சிக்கி உயிரிழந்த 2 காவலர்களின் குடும்பங்களுக்கு சக போலீசார் ஒன்றிணைந்து நிதி உதவி!

கோவை: கோவையில் தங்களுடன் பணியாற்றி விபத்தில் சிக்கி உயிரிழந்த 2 போலீஸ்காரர்களின் குடும்பங்களுக்கு சக போலீசார் ஒன்றிணைந்து நிதி உதவி வழங்கிய நிகழ்ச்சி சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவையில் தங்களுடன் பணியாற்றி விபத்தில் சிக்கி உயிரிழந்த 2 போலீஸ்காரர்களின் குடும்பங்களுக்கு சக போலீசார் ஒன்றிணைந்து நிதி உதவி வழங்கிய நிகழ்ச்சி சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் மருதுபாண்டியன் முதல்நிலைக் காவலர் இவர் சென்னை திருவான்மையூர் போக்குவரத்து பிரிவில் பணியாற்றி வந்தார். 2010ம் ஆண்டு பணியில் சேர்ந்த இவர் சில நாட்களுக்கு முன்பு வாகன விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

இதையடுத்து, இவருடைய 2010ம் ஆண்டு பணியில் ஒன்றாக சேர்ந்து தற்போது கோவை உள்பட மாநிலம் முழுவதும் பணியாற்றும் ஆண் மற்றும் பெண் போலீசார் ஒன்றிணைந்து 12 லட்சம் ரூபாய் நிதி திரட்டி நிதியை மதுரை செக்கானூரணியில் உள்ள மருது பாண்டியின் தாய் தந்தை மற்றும் மனைவியிடம் வழங்கினார்.

இதேபோன்று, சேலம் மாநகர போலீசில் மோப்பநாய் பிரிவில் முதல் நிலை காவலராக பணியாற்றி வந்த போலீஸ்காரர் வரதராஜன் என்பவரும் சில நாட்களுக்கு முன்பு விபத்தில் உயிரிழந்தார். இவருக்கும் சக போலீஸ்காரர் ஒன்றிணைந்து 11 லட்சத்து 28 ஆயிரம் ரூபாய் சேர்த்து சேலம் சுக்கம்பட்டியில் உள்ள அவரது குடும்பத்தினருக்கு வழங்கினர். இந்த நிகழ்ச்சி சம்பவத்தை உயர் அதிகாரிகள் பாராட்டினர்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...