கோவையை குளிர்வித்த கோடை மழை; மக்கள் மகிழ்ச்சி

கோவை: கோவையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து வெயிலின் காரணமாக வெப்பத்தின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. அதனால் அன்றாடம் பயணிப்பவர்கள், வேலைக்கு செல்பவர்கள் வெயிலின் தாக்கத்தால் மிகவும் கஷ்டப்பட்டு வந்தன.


கோவை: கோவையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து வெயிலின் காரணமாக வெப்பத்தின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. அதனால் அன்றாடம் பயணிப்பவர்கள், வேலைக்கு செல்பவர்கள் வெயிலின் தாக்கத்தால் மிகவும் கஷ்டப்பட்டு வந்தன.

இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக மாலை நேரங்களில் மேகம் மப்பும் மந்தாரமுமாக காணப்பட்டு வந்தது. இது குறித்து நேற்று வெளியான வானிலை ஆராய்ச்சி மையத்திலிருந்து அறிவிப்பில், வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும் என கூறியிருந்தனர்.

அதன்படி, கோவையில் தொடர்ந்து மேகமூட்டமாக இருந்து வருவதும், பிறகு கலைந்து செல்வதாக இருந்தது. திடீரென மாலை 7 மணி அளவில் இடியுடன், சாரல் மழை பெய்யத் துவங்கியது. குறிப்பாக, கணபதி, சரவணம்பட்டி, டெக்ஸ் டூல் பாலம், காந்திபுரம், ஒப்பணக்கார வீதி, கிராஸ்கட் ரோடு, சலிவன் வீதி லாலி ரோடு, வடவள்ளி, உக்கடம், சிங்காநல்லூர் உட்பட பல்வேறு பகுதிகளில் மழை பெய்ய தொடங்கியது.

தொடர்ந்து வெப்பத்தின் தாக்கத்தில் தவித்து வந்த கோவை மக்கள், இந்த திடீர் மழையால் மகிழ்ச்சி அடைந்தனர்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...