கோவை விவசாயக் கல்லூரி பேராசிரியர் வீட்டை உடைத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை: கோவை வடவள்ளி பகுதியில் வசிக்கக்கூடிய விவசாயக் கல்லூரி பேராசிரியருடைய வீட்டை உடைத்து 30 பவுன் நகை கொள்ளை அடித்து சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.


கோவை: கோவை வடவள்ளி பகுதியில் வசிக்கக்கூடிய விவசாயக் கல்லூரி பேராசிரியருடைய வீட்டை உடைத்து 30 பவுன் நகை கொள்ளை அடித்து சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- கோவை மருதமலை சாலையிலுள்ள விவசாய கல்லூரியில் துணைப் பேராசிரியராக பணியாற்றி வருபவர் ஆனந்தன் வயது 45. இவருடைய வீடு வடவள்ளி சிறுவாணி ரோடு பகுதியில் அமைந்துள்ளது. கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு தன்னுடைய உறவினர் வீட்டு விசேஷத்திற்காக குடும்பத்தாருடன் திண்டுக்கல்லுக்கு சென்றிருந்த ஆனந்தன், இன்று மாலை தமிழ் புத்தாண்டு என்பதால் கோவைக்கு திரும்பினார்.



இன்று, வீட்டை திறந்து உள்ளே பார்த்தபோது வீட்டின் போர்டிகோ ஜன்னலை உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.



பின்னர், பீரோவில் இருந்த 30 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பேராசிரியர் வடவள்ளி போலீசில் புகார் தெரிவித்தார்.



சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மோப்ப நாய்கள் மற்றும் கைரேகை நிபுணர்களை வரவழைத்து விசாரணை மேற்கொண்டனர். இதில், சிக்கிய ல ஒரு சில கைரேகைகளை, போலீஸார் ஒப்பிட்டு பார்த்து வருகின்றனர். அதேபோல வீட்டில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளையும், தெருவில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளையும் எடுத்துச் சென்று ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்த கொள்ளை சம்பவம் வடவள்ளி பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...