சாலை விபத்தில் முன்னாள் தாசில்தார் பலி!


கோவை மாவட்டத்தை சேர்ந்தவர் கிருஷ்ண மூர்த்தி (46). இவர் கோவை தெற்கு கோட்டாச்சியர் மதுராந்தகியின் நேர்முக உதவியாளராக பணியாற்றி வந்தார். இன்று காலை கிருஷ்ண மூர்த்தியும் அவரது மனைவி கவுரி-யும் இருசக்கர் வாகனத்தில் ஆத்துப்பாலம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த சரக்கு ஆட்டோ மோதியதில் கணவன் மனைவி இருவரும் தூக்கியெறியப்பட்டனர். 

இந்த  விபத்தில் கிருஷ்ணமூர்த்திக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து, அருகில் இருந்த பொதுமக்கள் கணவன் மனைவியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி கிருஷ்ண மூர்த்தி உயிரிழந்தார். கவுரி தற்போது அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். இச்சம்பவம் குறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

உயிரிழந்த கிருஷ்ண மூர்த்தி மேட்டுப்பாளையம் நகராட்சியில் தாசில்தாராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் சர்வதேச ரோபோடிக் புற்றுநோய் அறுவை சிகிச்சை மாநாடு ROSCON 2026 நடைபெற்று வருகிறது

G. Kuppuswamy Naidu Memorial Hospital-ல் மார்ச் 20 முதல் 22 வரை ROSCON 2026 மாநாடு நடைபெற்று வருகிறது. இந்தியா மற்றும் வ...

CII பெண்கள் பிரிவு கோவை மண்டலத்தில் ப்ரீத்தா பிரியதர்ஷினி நாயுடு புதிய Convenor ஆக தேர்வு

கோவையில் நடந்த இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் பெண்கள் பிரிவு ஆண்டு விழாவில் Richmond Talent Solutions நிறுவனர் ப்ரீத்தா...

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம்: கோவை-அபுதாபி விமான சேவை மார்ச் 28 வரை ரத்து

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக கோவை விமான நிலையத்தில் இருந்து அபுதாபிக்கு செல்லும் இண்டிகோ விமான சேவை மார்ச் 28 வரை...

மின்கட்டண குறைப்பு வாக்குறுதி தேர்தல் வெற்றியின் திறவுகோல் - தொழில் துறையினர்

சட்டமன்ற தேர்தலில் மின்கட்டண குறைப்பு வாக்குறுதி அரசியல் கட்சிகளின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிக்கும் என கோவை தொழில் து...

50 ஆண்டுகள் அன்பின் சுவை: ரமலான் திருநாளில் பிரியாணி வழங்கும் இஸ்லாமிய குடும்பம்

திருப்பூரில் பாத்திமாபீவி குடும்பம் கடந்த 50 ஆண்டுகளாக ரமலான் திருநாளில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பிரியாணி தயாரி...

கோவை இடையர் வீதியில் விபசார வலையில் மூதாட்டி உள்பட மூவர் கைது

கோவை இடையர் வீதி பகுதியில் வீட்டில் விபசாரம் நடத்திய சம்பவத்தில் வெரைட்டி ஹால் ரோடு போலீசார் ரகசிய தகவலின் பேரில் சோதனை...