கோவை - ஷார்ஜா' ஏர் அரேபியா சேவை 'ஹவுஸ்ஃபுல்'..!

கோவை: கோவை - ஷார்ஜா இடையே 'ஏர் அரேபியா' நிறுவனம் சார்பில், திங்கள், வியாழன், வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விமான சேவை வழங்கப்படுகிறது. விமானிகள் மற்றும் விமானப் பணிப்பெண்கள் தவிர்த்து, 168 பயணிகள் பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட விமானம் இந்த சர்வீசுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.


கோவை: கோவை - ஷார்ஜா இடையே 'ஏர் அரேபியா' நிறுவனம் சார்பில், திங்கள், வியாழன், வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விமான சேவை வழங்கப்படுகிறது. விமானிகள் மற்றும் விமானப் பணிப்பெண்கள் தவிர்த்து, 168 பயணிகள் பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட விமானம் இந்த சர்வீசுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு வரை 80 பயணிகள் மட்டுமே விமானத்தில் பயணம் செய்து வந்தனர். தற்பொழுது, சேவை வழங்கப்படும் 5 நாட்களிலும் ஹவுஸ் ஃபுல்லாக தொடர்ந்து பறந்து வருகிறது 'ஏர் அரேபியா' விமானம்.

இதுகுறித்து விமான நிலைய வட்டாரங்கள் கூறுகையில், "பொதுவாக வணிகர்கள் தான் அதிக எண்ணிக்கையில் ஏர் அரேபியா விமானத்தை பயன்படுத்தி வருகின்றனர். முன்பு வணிகர்கள் ஷார்ஜாவுக்கு சென்றால் குறைந்தது ஒரு வாரம் கழித்து தான் திரும்பி வருவது வழக்கம். ஆனால், தற்பொழுது நோய்த் தொற்று பரவல் அதிகமாக உள்ள காரணத்தால் இன்று புறப்படுவோர், ஓரிரு நாட்களிலேயே மீண்டும் தங்களது பணியை முடித்து கோவைக்கு திரும்பி வருகின்றனர்.

சர்வதேச விமான போக்குவரத்து பிரிவில் கோவையிலிருந்து சிங்கப்பூர், ஷார்ஜா மற்றும் இலங்கைக்கு விமான சேவை வழங்கப்பட்டு வந்தது. ஆனால், தற்போது 'ஏர் அரேபியா' நிறுவனம் மட்டுமே சர்வதேச பிரிவில் விமான சர்வீஸ் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது."

இவ்வாறு விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...