கோவை: சித்திரைத் திருநாளை முன்னிட்டு திருமூர்த்தி மலையில் குவிந்த பக்தர்கள் தீர்த்த குடங்களுடன் வழிபாடு செய்தனர்.
கோவை: சித்திரைத் திருநாளை முன்னிட்டு திருமூர்த்தி மலையில் குவிந்த பக்தர்கள் தீர்த்த குடங்களுடன் வழிபாடு செய்தனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ளது திருமூர்த்தி மலை. இங்கு பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரும் ஒரே இடத்தில் அருள் பாலிக்கும் அமணலிங்கேஸ்வரர் ஆலயம் உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் மலைகளுக்கு நடுவே அமைந்துள்ள இக்கோவிலில் காண ஏராளமான பக்தர்கள் வருகை தருவது உண்டு.
இந்த கோவிலிலிருந்து 900 மீட்டர் உயரத்தில் மலைப்பாதையில் நடந்து சென்றால் பஞ்சலிங்க அருவி வரும். இந்த பஞ்சலிங்க அருவியில் நீராட ஆண்டுதோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை புரிவது வழக்கம்.
இந்நிலையில், இன்று சித்திரை திருநாள் என்பதால் இக்கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர். உடுமலை சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களில் இருந்து தங்களது சொந்த கிராமத்தில் உள்ள காவல் தெய்வங்களுக்கு தீர்த்தம் எடுத்துச் செல்ல இன்று இங்கு வருகை தந்தனர்.

அப்போது, கோவில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் எங்கு திரும்பினாலும் தீர்த்த குடங்களுடன் பக்தர்கள் அதிக அளவில் காணப்பட்டனர். கொரோனா பரவல் எதிரொலியால் இன்று இங்கு பெரிய அளவில் கூட்டம் வராது என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அதற்கு மாறாக பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.

மேலும் இங்கு வரும் பக்தர்கள் அனைவரும் அருவிக்கு சென்று குளிப்பதால் அங்கும் கூட்டம் அலை மோதியது.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ளது திருமூர்த்தி மலை. இங்கு பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரும் ஒரே இடத்தில் அருள் பாலிக்கும் அமணலிங்கேஸ்வரர் ஆலயம் உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் மலைகளுக்கு நடுவே அமைந்துள்ள இக்கோவிலில் காண ஏராளமான பக்தர்கள் வருகை தருவது உண்டு.
இந்த கோவிலிலிருந்து 900 மீட்டர் உயரத்தில் மலைப்பாதையில் நடந்து சென்றால் பஞ்சலிங்க அருவி வரும். இந்த பஞ்சலிங்க அருவியில் நீராட ஆண்டுதோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை புரிவது வழக்கம்.
இந்நிலையில், இன்று சித்திரை திருநாள் என்பதால் இக்கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர். உடுமலை சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களில் இருந்து தங்களது சொந்த கிராமத்தில் உள்ள காவல் தெய்வங்களுக்கு தீர்த்தம் எடுத்துச் செல்ல இன்று இங்கு வருகை தந்தனர்.
அப்போது, கோவில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் எங்கு திரும்பினாலும் தீர்த்த குடங்களுடன் பக்தர்கள் அதிக அளவில் காணப்பட்டனர். கொரோனா பரவல் எதிரொலியால் இன்று இங்கு பெரிய அளவில் கூட்டம் வராது என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், அதற்கு மாறாக பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.
மேலும் இங்கு வரும் பக்தர்கள் அனைவரும் அருவிக்கு சென்று குளிப்பதால் அங்கும் கூட்டம் அலை மோதியது.