வால்பாறையில் அரசு பேருந்துடன் கார் மோதி விபத்து - ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு!

கோவை: வால்பாறையில் அரசு பேருந்துடன் கார் மோதி விபத்துக்குள்ளான நிலையில், சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


கோவை: வால்பாறையில் அரசு பேருந்துடன் கார் மோதி விபத்துக்குள்ளான நிலையில், சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கோவை மாவட்டம் வால்பாறை புதுக்காடு எஸ்டேட்டில் இருந்து முடீஸ் வழியாக அரசுப்பேருந்து காந்தி சிலை வளாகத்தை நோக்கி வந்து கொண்டிருந்தது.



இந்நிலையில், ஸ்டான் மோர் சந்திப்பில் இருந்து மேல் நோக்கி வந்து கொண்டிருந்தபோது கீழ்நோக்கி வந்துகொண்டிருந்த கார் அரசு பேருந்துடன் உரசியது. இதில் காரின் பின்பக்க பக்கவாட்டில் சேதம் ஏற்பட்டது இதன் காரணமாக கார் அங்கேயே நிறுத்தப்பட்டது.



இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. தொடர்ந்து அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களும் பொதுமக்களும் கார் உரிமையாளருடன் பேசி சமாதானம் அடைந்ததை தொடர்ந்து கார் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து போக்குவரத்து சீரானது. இந்த விபத்து காரணமாக சுமார் ஒரு மணி நேரம் அப்பகுதியில் போக்குவரத்து தடைபட்டது.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...