கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் தமிழ் புத்தாண்டை கொண்டாடும் விதமாக வால்பாறை நகர மக்கள் மட்டுமின்றி தேயிலைத் தோட்டத்தில் உள்ள மக்களும் வால்பாறையில் உள்ள ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு வந்து வழிபாடு நடத்தினர்.
கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் தமிழ் புத்தாண்டை கொண்டாடும் விதமாக வால்பாறை நகர மக்கள் மட்டுமின்றி தேயிலைத் தோட்டத்தில் உள்ள மக்களும் வால்பாறையில் உள்ள ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு வந்து வழிபாடு நடத்தினர்.

ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் எழுந்தருளியுள்ள முழு முதற் கடவுள் விநாயகர், ஸ்ரீ சுப்பிரமணியர், ஸ்ரீ சுவாமி ஐயப்பன், சிவபெருமான், நந்தி தேவர், நவகிரக நாயகர்கள், காலபைரவர் ஆகிய சுவாமிகளை வழிபட்டு தரிசனம் செய்தனர்.
மேலும், தங்களது பெயருக்கும், குடும்பத்தினர் பெயர்களுக்கும் அர்ச்சனை செய்து வழிபட்டனர். தொடர்ந்து கோவில் வளாகத்தில் தீபாராதனைக்குப் பின் பிரசாதம் வழங்கப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.
ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் எழுந்தருளியுள்ள முழு முதற் கடவுள் விநாயகர், ஸ்ரீ சுப்பிரமணியர், ஸ்ரீ சுவாமி ஐயப்பன், சிவபெருமான், நந்தி தேவர், நவகிரக நாயகர்கள், காலபைரவர் ஆகிய சுவாமிகளை வழிபட்டு தரிசனம் செய்தனர்.
மேலும், தங்களது பெயருக்கும், குடும்பத்தினர் பெயர்களுக்கும் அர்ச்சனை செய்து வழிபட்டனர். தொடர்ந்து கோவில் வளாகத்தில் தீபாராதனைக்குப் பின் பிரசாதம் வழங்கப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.