கோவையில் மின்சாரம் தாக்கி 3 வயது மதிக்கத்தக்க மயில் பரிதாபமாக உயிரிழப்பு!

கோவை பாப்பநாயக்கன் பாளையம் பகுதியில் உள்ள மின்சார டிரான்ஸ்பார்மர் மீது பறந்து வந்து அமர்ந்தது 3 வயது பெண் மயில் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தது.


கோவை: கோவை பாப்பநாயக்கன் பாளையம் பகுதியில் உள்ள மின்சார டிரான்ஸ்பார்மர் மீது பறந்து வந்து அமர்ந்தது 3 வயது பெண் மயில் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தது.

பின்னர், சாலையில் கிடந்த மயிலை கண்ட பொதுமக்கள் வனத்துறை மற்றும் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.



இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் உயிரிழந்த பெண் மயிலை மீட்டு மாவட்ட வன அலுவலகத்திற்கு எடுத்துச் சென்றனர். அங்கு கால்நடை மருத்துவ பரிசோதனைக்கு பின் அதே பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது.

மின்சாரம் தாக்கி மயில் இறந்ததால் பாப்பநாயக்கன் பாளையம் பகுதியில் சிறிது நேரம் மின்சாரம் தடைபட்டது. ஊழியர்கள் சரிசெய்வததை தொடர்ந்து மின் விநியோகம் மீண்டும் சீரானது.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...