கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே அரசு பேருந்து மோதியதில் 16 ஆடுகள் பரிதாபமாக உயிரிழப்பு!

கோவையில் அரசு பேருந்து நிலைதடுமாறி ஓடியதில் 16 ஆடுகள் நசுங்கி பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவையில் அரசு பேருந்து நிலைதடுமாறி ஓடியதில் 16 ஆடுகள் நசுங்கி பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம், பெரியநாயக்கன் பாளையம் அருகே உள்ள மத்தம்பாளையத்தை சேர்ந்தவர் தனபால். ஆடுகள் பண்ணை வைத்துள்ளார். இவரிடம் வேலை பார்த்து வரும் வேலுசாமி, நேற்று இரவு, 7:00 மணிக்கு மேய்ச்சலை முடித்து விட்டு, பண்ணை நோக்கி, ஆடுகளை ஓட்டி வந்தார்.

இந்த நிலையில், மத்தம்பாளையம் அருகே மேட்டுப்பாளையம் ரோட்டை கடக்க முயன்றபோது, அவ்வழியாக வந்த அரசு பேருந்து, ஆடுகள் மீது மோதியது. இதில், 16 ஆடுகள், அதே இடத்தில் இறந்தன.

பின்னர், இச்சம்பவம் தொடர்பாக, பெரியநாயக்கன்பாளையம் போலீசார் அரசு பேருந்து ஓட்டுநர் சிவக்குமாரிடம் விசாரித்து வருகின்றனர்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...