கொரோனா அச்சம்: கோவையில் பிரசித்தி பெற்ற கோவில்களில் தமிழ் புத்தாண்டு சிறப்பு பூஜைகளில் குறைந்த அளவிலான பக்தர்கள் மட்டுமே வழிபாடு!

கோவை: கொரோனா 2வது அலை காரணமாக கோவையின் பிரசித்தி பெற்ற கோவில்களில் தமிழ் புத்தாண்டையொட்டி நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் குறைந்த அளவிலான பக்தர்கள் மட்டுமே கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.



கோவை: கொரோனா 2வது அலை காரணமாக கோவையின் பிரசித்தி பெற்ற கோவில்களில் தமிழ் புத்தாண்டையொட்டி நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் குறைந்த அளவிலான பக்தர்கள் மட்டுமே கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

தமிழ் புத்தாண்டையொட்டி கோவையில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் கனிகள் வைத்து சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.

அந்த வகையில், டவுன்ஹால் பகுதியில் உள்ள கோனியம்மன் கோவில், புளியகுளம் விநாயகர் கோவில், சித்தாபுதூர் ஐயப்பன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் தமிழ் புத்தாண்டை ஒட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. புளியகுளம் விநாயகருக்கு மா, பலா, வாழை, ஆப்பிள், ஆரஞ்சு உள்ளிட்ட கனிகளால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.

இதனிடையே, கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் தமிழக அரசின் பாதுகாப்பு விதிகள் அமலில் உள்ளதால் கோனியம்மன் மற்றும் புலியகுளம் விநாயகர் கோவில்களில் குறைந்த அளவிலான பக்தர்கள் முக கவசம் அணிந்து தனிநபர் இடைவெளியுடன் சுவாமி தரிசனம் செய்தனர்.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அடுத்தபடியாக கோவையில் சித்தாபுதூர் ஐயப்பன் கோவில் பிரசித்தி பெற்றதாக உள்ளது. இங்கு தமிழ் புத்தாண்டையொட்டி நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் கோவையில் வசிக்கும் திரளான மலையாளிகள் முக கவசம் அணிந்து நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். முன்னதாக உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு முக கவசம் அணிந்து இருப்பதை உறுதி செய்த பிறகே பொதுமக்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

அதே போல், கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், விஷூ கொண்டாட்டத்திற்காக கேரளா செல்லும் கேரள மக்கள், கோவையிலேயே கொண்டாடினர்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...