கோவை: கோவை தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் பல்லாயிரக்கணக்கானோர் கடந்த ஒரு வாரத்தில் ஆர்வத்துடன் முன்வந்து தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.
கோவை: கோவை தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் பல்லாயிரக்கணக்கானோர் கடந்த ஒரு வாரத்தில் ஆர்வத்துடன் முன்வந்து தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.
கொரோனா நோய் தொற்று பரவலைத் தடுக்க 45 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதை அரசு கட்டாயமாக்கி உள்ளது. தவிர 100 ஊழியர்களுக்கு மேல் பணியாற்ற கூடிய தொழில் நிறுவனங்களில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து கோவை மாவட்டத்தில் தொழில் நிறுவன உரிமையாளர்கள் தாமாக முன்வந்து தங்களது ஊழியர்களை தடுப்பூசி போட்டுக்கொள்ள அறிவுறுத்துவதுடன், பணி நேரத்தில் அவர்களுக்கு தேவையான சிறப்பு அனுமதி, போக்குவரத்து வசதி, உணவு உள்ளிட்டவற்றையும் ஏற்பாடு செய்து தருகின்றனர்.
ஒரு சில தொழில் நிறுவனங்கள் சிறப்பு முகாம் நடத்தி தங்கள் ஊழியர்கள் தடுப்பூசி போட ஏற்பாடு செய்துள்ளனர். இப்படி கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.
'எல்ஜி அல்ட்ரா இண்டஸ்ட்ரீஸ்' மனிதவள மேம்பாட்டுத் துறை அதிகாரிகள் செந்தில்குமார், முருகேசன் ஆகியோர் கூறுகையில், " நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் 100 தொழிலாளர்களுக்கு மேல் பணிபுரியும் தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட தொழிலாளர்களுக்கு தடுப்பூசி போட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
எங்கள் நிறுவனத்தில் இன்று மட்டும் 60க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அரசு வழிகாட்டுதலை சரியாக பின்பற்ற வேண்டியது அனைவரின் கடமை,” என்று கூறினர்.
கொரோனா நோய் தொற்று பரவலைத் தடுக்க 45 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதை அரசு கட்டாயமாக்கி உள்ளது. தவிர 100 ஊழியர்களுக்கு மேல் பணியாற்ற கூடிய தொழில் நிறுவனங்களில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து கோவை மாவட்டத்தில் தொழில் நிறுவன உரிமையாளர்கள் தாமாக முன்வந்து தங்களது ஊழியர்களை தடுப்பூசி போட்டுக்கொள்ள அறிவுறுத்துவதுடன், பணி நேரத்தில் அவர்களுக்கு தேவையான சிறப்பு அனுமதி, போக்குவரத்து வசதி, உணவு உள்ளிட்டவற்றையும் ஏற்பாடு செய்து தருகின்றனர்.
ஒரு சில தொழில் நிறுவனங்கள் சிறப்பு முகாம் நடத்தி தங்கள் ஊழியர்கள் தடுப்பூசி போட ஏற்பாடு செய்துள்ளனர். இப்படி கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.
'எல்ஜி அல்ட்ரா இண்டஸ்ட்ரீஸ்' மனிதவள மேம்பாட்டுத் துறை அதிகாரிகள் செந்தில்குமார், முருகேசன் ஆகியோர் கூறுகையில், " நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் 100 தொழிலாளர்களுக்கு மேல் பணிபுரியும் தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட தொழிலாளர்களுக்கு தடுப்பூசி போட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
எங்கள் நிறுவனத்தில் இன்று மட்டும் 60க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அரசு வழிகாட்டுதலை சரியாக பின்பற்ற வேண்டியது அனைவரின் கடமை,” என்று கூறினர்.