போலீஸ் இன்ஸ்பெக்டரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த மூவருக்கு சிறை!

கோவை: போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு எதிராக தகாத வார்த்தைகளை பேசி தாக்கி கொலை மிரட்டல் விடுத்த மூவர் சிறையில் அடைக்கப்பட்டனர்.


கோவை: போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு எதிராக தகாத வார்த்தைகளை பேசி தாக்கிகொலைமிரட்டல் விடுத்த மூவர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

கோவை குனியமுத்தூர் அருகே ஆசாத் நகரைச் சேர்ந்த புரோஸ்கான்( 30), முகமது ரவி (32), வெற்றிலை கார வீதியைச் சேர்ந்த ராமன்( 31) ஆகிய நண்பர்கள் மூன்று பேரும்பாலக்காடு ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடையில் வழக்கம்போல மது குடித்தனர்.

போதை தலைக்கேறிய நிலையில் அவர்களுக்கு இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. டாஸ்மாக் கடை முன்பு நின்று கொண்டு தகராறு செய்து கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக ரோந்து சென்ற குனியமுத்தூர் போலீசார் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன்,இங்கு நின்று கொண்டு என்ன செய்கிறீர்கள் வீட்டுக்குச் செல்லுங்கள் என கூறினார்.

இதனால் ஆத்திரம் அடைந்த 3 பேரும், சப் இன்ஸ்பெக்டரிடம் உன்னால் முடிந்ததை செய் இங்கிருந்து செல்ல முடியாது என கூறி கொலை மிரட்டல் விடுத்ததுடன், அவரை தாக்கி கீழே தள்ளி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

இதுகுறித்து சப் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட 3 பேருக்கு எதிராக தகாத வார்த்தைகள் பேசுதல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் கொலை மிரட்டல் உட்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மூன்று பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...