அரக்கோணம் இரட்டைப் படுகொலையை கண்டித்து சமூக அமைப்புகள் போராட்டம்!

கோவை: அரக்கோணத்தில் தேர்தல் முன்பகை காரணமாக இருவர் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தீஒமு, மாதர் சங்கம், வாலிபர் சங்கம், மாணவர் சங்க அமைப்பினர் கோவையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: அரக்கோணத்தில் தேர்தல் முன்பகை காரணமாக இருவர் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தீஒமு, மாதர் சங்கம், வாலிபர் சங்கம், மாணவர் சங்க அமைப்பினர் கோவையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சட்டமன்ற பொதுத் தேர்தலில், வாக்கு சேகரிப்பின் போது ஏற்பட்ட முன்பகையில் விடுதலை சிறுத்தைகள் அமைப்பைச் சேர்ந்த இரண்டு தலித் இளைஞர்கள், அரக்கோணம் ராணிப்பேட்டை பகுதியில் படுகொலை செய்யப்பட்டனர்.

இந்தப் படுகொலையை கண்டித்து தமிழகம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட அமைப்புகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக கோவை புலியகுளம் பெரியார் சிலை அருகே மார்க்சிஸ்ட் கட்சி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் ஆகிய அமைப்புகளின் சார்பில் தலித் இளைஞர்களின் படுகொலைக்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணை பொதுச்செயலாளர் யு.கே.சிவஞானம், மாணவர் சங்க மாவட்ட செயலாளர் தினேஷ் ராஜா,ஊரக உள்ளாட்சித் துறை சங்க பொது செயலாளர் கே.ரத்தினகுமார், தமுஎகச மாநில குழு உறுப்பினர் அ.கரீம், மற்றும் சிபிஎம் கிழக்கு நகர குழு உறுப்பினர் த.நாகராஜ் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். திரளானோர் பங்கேற்று இரட்டை படுகொலையை கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...