குன்னூரில் குடியிருப்பு பகுதியில் புகுந்த காட்டெருமையால் மக்கள் அச்சம்!

குன்னூர்: குன்னூர் சிம்ஸ் பார்க் குடியிருப்பு பகுதியில் புகுந்த காட்டெருமையை காட்டுக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


குன்னூர்: குன்னூர் சிம்ஸ் பார்க் குடியிருப்பு பகுதியில் புகுந்த காட்டெருமையை காட்டுக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம், குன்னூர் பகுதியை சுற்றி அதிகளவிலான வனப்பகுதிகள் உள்ளன. எனவேகரடி, சிறுத்தை, காட்டெருமை போன்ற வனவிலங்குகள் காட்டுக்குள் இருந்து அவ்வப்போது நகர்ப் பகுதியில் உலா வருவது வழக்கமாக உள்ளது.



அண்மையில் சிம்ஸ் பார்க் குடியிருப்பு பகுதியில் புகுந்த ஒற்றைக் காட்டெருமை அப்பகுதியிலேயே நீண்ட நேரமாகப் உலா வந்து கொண்டிருந்தது. இதனால், அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

அசம்பாவிதங்கள் நடக்கும் முன்பு அந்த காட்டெருமையை வனத் துறையினா் அடர்ந்த வனப் பகுதிக்குள் துரத்த வேண்டும் என்று பலமுறை அப்பகுதி மக்கள் புகார் அளித்தனர். எனினும் வனத்துறையினர் அதனை கண்டுகொள்ளவில்லை.

குன்னூர் சுற்று வட்டார பகுதிகளில் காட்டெருமை தாக்கி இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே, குடியிருப்பு பகுதிகளில் உலா வரும் காட்டெருமையால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை வெளியே நடமாட அச்சம் தெரிவித்துள்ளனர். இனியாவது வனத்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...