திமுக சார்பில் ஆதரவற்றோருக்கு கொரோனா தடுப்பு உபகரணங்கள் வழங்கல்!

கோவை: ஆழியாறு அருகே ஆதரவற்றோர் இல்லத்தில் இருப்போருக்கு திமுக சார்பில் கொரோனா நோய் தடுப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டன.


கோவை: ஆழியாறு அருகே ஆதரவற்றோர் இல்லத்தில் இருப்போருக்கு திமுக சார்பில் கொரோனா நோய் தடுப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டன.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் அதிகரித்திருக்கிறது. திமுக சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, நோய் தடுப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும் என்று அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தி இருந்தார்.

இதனடிப்படையில் கோவை தெற்கு மாவட்ட திமுக மகளிர் அணி சார்பாக, ஆழியார் அருகே உள்ள காப்பகத்தில் உள்ள ஆதரவற்றோருக்கு கொரோனா நோய் தடுப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. காப்பகத்தில் உள்ள 150க்கும் மேற்பட்ட முதியோர்களுக்கு நோய் தொற்று ஏற்படாமல் இருக்க தேவையான, கபசுர குடிநீர், முக கவசங்களும் வழங்கப்பட்டன.

மேலும் முதியோருக்கு மதிய உணவும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு கோவை தெற்கு மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் சண்முகப்பிரியா சீனிவாசன், தலைமை தாங்கினார். கோவை தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ், முதியவர்களுக்கு முக கவசம் கிருமிநாசினி உள்ளிட்ட பொருட்களை வழங்கினார். மேலும் இந்த நிகழ்ச்சியில் பொள்ளாச்சி நகர மாணவரணி மகளிர் அணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...