விஷூ பண்டிகை: கோவையில் இருந்து 15 டன் பூ, பழம், காய்கறிகள் ஷார்ஜாவுக்கு விமானத்தில் கொண்டு செல்லப்பட்டன!

கோவை: விஷூ பண்டிகைக்காக கடந்த 5 நாட்களில் மட்டும் கோவையிலிருந்து 15 டன் பூ, பழம், காய்கறிகள் ஷார்ஜாவுக்கு விமானத்தில் கொண்டு செல்லப்பட்டன.


கோவை: விஷூ பண்டிகைக்காக கடந்த 5 நாட்களில் மட்டும் கோவையிலிருந்து 15 டன் பூ, பழம், காய்கறிகள் ஷார்ஜாவுக்கு விமானத்தில் கொண்டு செல்லப்பட்டன.

விஷு பண்டிகை நாளை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், வெளிநாட்டில் வாழும் கேரள மக்கள் பயன்பெறும் வகையில் கோவையில் இருந்த ஷார்ஜாவுக்கு இயக்கப்படும் 'ஏர் அரேபியா' விமானத்தில் அதிக அளவிலான பூ, பழம் மற்றும் காய்கறிகள் கொண்டு செல்லப்பட்டுள்ளன.

இதுகுறித்து விமான நிலைய வட்டாரங்கள் கூறுகையில், "ஏர் அரேபியா நிறுவனம் சார்பில் வாரத்தில் ஐந்து நாட்கள் கோவையில் இருந்து ஷார்ஜாவுக்கு விமான சர்வீஸ் வழங்கப்பட்டு வருகிறது. விஷூ பண்டிகையை முன்னிட்டு கடந்த ஐந்து நாட்களில் மட்டும் 15 டன் எடையிலான பூ, பழம், காய்கறிகள் ஷார்ஜாவுக்கு விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டன.

பொதுவாக இந்த விமானத்தில் காய்கறிகள் தவிர இன்ஜினியரிங் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுவது வழக்கம். ஆனால், தற்பொழுது விஷு பண்டிகை காரணமாக கடந்த 5 நாட்களில் பூ, பழம் மற்றும் காய்கறிகள் மட்டுமே அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டன.

இவ்வாறு விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...