கோவையில் பொதுமக்களுக்கு செலுத்துவதற்காக 42,900 டோஸ் தடுப்பூசிகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது - அரசின் முதன்மை செயலாளர்!

கோவை: கோவை மாவட்டத்தில், பொதுமக்களுக்கு செலுத்துவதற்காக, 42 ஆயிரத்து 900 டோஸ் தடுப்பூசிகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக அரசின் முதன்மை செயலாளர் முருகானந்தம் தெரிவித்தார்.


கோவை: கோவை மாவட்டத்தில், பொதுமக்களுக்கு செலுத்துவதற்காக, 42 ஆயிரத்து 900 டோஸ் தடுப்பூசிகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக அரசின் முதன்மை செயலாளர் முருகானந்தம் தெரிவித்தார்.

கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை தொடர்பான ஆலோசனை கூட்டம், மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், தொழில் துறை முதன்மை செயலருமான முருகானந்தம் தலைமையில், மாவட்ட ஆட்சியர் நாகராஜன் முன்னிலையில் நேற்று நடந்தது.

இந்த கூட்டத்தில், அலுவலர்கள் மத்தியில் அரசு செயலாளர் முருகானந்தம் பேசியதாவது:

கோவை மாவட்டத்தில் இதுவரை 9 லட்சத்து 80 ஆயிரத்து 903 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில், 63 ஆயிரத்து 903 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 58 ஆயிரத்து 860 பேர் குணம் அடைந்துள்ளனர். 699 பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போது, அரசு மற்றும் வெவ்வேறு தனியார் மருத்துவமனைகளில், கொரோனா தொற்றுக்காக, 2,397 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை, இரண்டு லட்சத்து 64 ஆயிரத்து 502 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

அதேபோல, மாவட்டத்தில், 42 ஆயிரத்து 900 டோஸ் தடுப்பூசி இருப்பில் உள்ளது. 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். தற்போது நாளொன்றுக்கு, 500 முதல் 600 பேர், தொற்று பாதிக்கப்படுகின்றனர். அரசின் நிலையான வழிகாட்டு முறைகளை பின்பற்றி தொழிற்சாலைகள் இயங்க வேண்டும். பின்பற்றாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, முருகானந்தம் பேசினார்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...