கோவை : மூலப்பொருட்கள் விலை உயர்வை கண்டித்து மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஒரு நாள் அடையாள உற்பத்தி நிறுத்தப் போராட்டத்திற்கு கோவை தொழில் நிறுவனங்கள் ஆயத்தமாகி வருகின்றன.
: கோவை: மூலப்பொருட்கள் விலை உயர்வை கண்டித்து மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஒரு நாள் அடையாள உற்பத்தி நிறுத்தப் போராட்டத்திற்கு கோவை தொழில் நிறுவனங்கள் ஆயத்தமாகி வருகின்றன.
கொரோனா நோய்த்தொற்று பரவல் அனைத்து தொழில் துறையிலும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மறுபுறம் மூலப்பொருட்கள் விலை தொடர்ந்து தாறுமாறாக அதிகரித்து வருகிறது.
இதனால் கோவையில் உள்ள பல்லாயிரக்கணக்கான 'எம்எஸ்எம்இ'தொழில் நிறுவனங்கள் நெருக்கடியில் சிக்கியுள்ளன. இந்த நிலை நீடித்தால் பல லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போது உள்ள சூழ்நிலையை எதிர் கொள்ளும் நோக்கில் கோவையில் இன்று மாலை பல்வேறு தொழில் அமைப்பினர் பங்கேற்ற கலந்துரையாடல் கூட்டம் நடந்தது.
இது குறித்து தொழில்துறை வட்டாரங்கள் கூறுகையில், “இன்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் மூலப்பொருட்கள் விலை உயர்வு குறித்து கண்டனம் தெரிவிப்பதோடு, மத்திய அரசின் கவனத்திற்கு பிரச்சினையை கொண்டு செல்ல வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.
தவிர இந்த பிரச்சனையின் தீவிரத்தை உணர்த்தும் நோக்கில் கோவையில் ஒரு நாள் அடையாள உற்பத்தி நிறுத்த போராட்டம் நடத்தலாம் எனவும் ஆலோசிக்கப்பட்டு உள்ளது. பெரும்பாலான தொழில் அமைப்பினர் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியிடப்படும்,”என தொழில் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
தென்னிந்திய இன்ஜினியரிங் உற்பத்தியாளர்கள் சங்கம், கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்கம், இந்திய தொழில் வர்த்தக சபை, கோவை கிளை, கோவை பம்ப்செட் மற்றும் உதிரி பாகங்கள் தயாரிப்பாளர்கள் சங்கம், கோவை திருப்பூர் மாவட்ட ஊரக மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்கம், தேசிய பவுண்டரி சங்கம் (IIF) உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.
கொரோனா நோய்த்தொற்று பரவல் அனைத்து தொழில் துறையிலும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மறுபுறம் மூலப்பொருட்கள் விலை தொடர்ந்து தாறுமாறாக அதிகரித்து வருகிறது.
இதனால் கோவையில் உள்ள பல்லாயிரக்கணக்கான 'எம்எஸ்எம்இ'தொழில் நிறுவனங்கள் நெருக்கடியில் சிக்கியுள்ளன. இந்த நிலை நீடித்தால் பல லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போது உள்ள சூழ்நிலையை எதிர் கொள்ளும் நோக்கில் கோவையில் இன்று மாலை பல்வேறு தொழில் அமைப்பினர் பங்கேற்ற கலந்துரையாடல் கூட்டம் நடந்தது.
இது குறித்து தொழில்துறை வட்டாரங்கள் கூறுகையில், “இன்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் மூலப்பொருட்கள் விலை உயர்வு குறித்து கண்டனம் தெரிவிப்பதோடு, மத்திய அரசின் கவனத்திற்கு பிரச்சினையை கொண்டு செல்ல வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.
தவிர இந்த பிரச்சனையின் தீவிரத்தை உணர்த்தும் நோக்கில் கோவையில் ஒரு நாள் அடையாள உற்பத்தி நிறுத்த போராட்டம் நடத்தலாம் எனவும் ஆலோசிக்கப்பட்டு உள்ளது. பெரும்பாலான தொழில் அமைப்பினர் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியிடப்படும்,”என தொழில் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
தென்னிந்திய இன்ஜினியரிங் உற்பத்தியாளர்கள் சங்கம், கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்கம், இந்திய தொழில் வர்த்தக சபை, கோவை கிளை, கோவை பம்ப்செட் மற்றும் உதிரி பாகங்கள் தயாரிப்பாளர்கள் சங்கம், கோவை திருப்பூர் மாவட்ட ஊரக மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்கம், தேசிய பவுண்டரி சங்கம் (IIF) உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.