பொள்ளாச்சியில் 7 வயது சிறுமி இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் விருது பெற்று சாதனை படைத்துள்ளது.
கோவை: பொள்ளாச்சியில் 7 வயது சிறுமி இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் விருது பெற்று சாதனை படைத்துள்ளது.
பொள்ளாச்சி எஸ்.வி நாயுடு வீதியைச் சேர்ந்தவர் வாஞ்சிநாதன் - மீனாட்சி இவர்களின் மகள் வர்ணா (7) 2-ம் வகுப்பு படித்து வருகிறார். சிறுவயது முதல் வேகமாக எழுதக்கூடிய திறமை கொண்ட சிறுமியிடம் துரிதமாக கற்றுக் கொள்ளும் ஆற்றல் இருப்பதை கண்ட பெற்றோர்கள் சிறுமி வர்ணாவின் திறமையை ஊக்குவிக்கும் வகையில் இந்தியா புக் ஆப் ரெக்கார்டுக்கு விண்ணப்பித்தனர்.
வர்ணா நன்றி என்கிற வார்த்தையை 9 மொழிகளில் கூறும், 5 மொழிகளில் மெல்லிய குரலில் பாடல்களைப் பாடும் திறமை, மற்றும் 100யில் இருந்து 1 வரை எண்களை தலைகளாக ஒரு நிமிடத்தில் எழுதிய திறன் கொண்ட மாணவி வர்ணாவின் வீடியோவை அவரது பெற்றோர்கள் இந்தியன் புக் ஆப் ரெக்கார்டுக்கு அனுப்பிவைத்தனர்.
இந்த நிலையில், சிறுமி வர்ணாவின் திறமையை இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் அங்கீகரித்து மாணவி வர்ணாவிற்க்கு இந்தியன் புக் ஆப் ரெக்கார்டு விருது கிடைத்துள்ளது.

இதுகுறித்து மாணவியின் தாயார் மீனாட்சி கூறியதாவது, என்னுடைய மகள் வர்ணா வாஞ்சிநாதன் சாதனை இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்ல் பதிவாகியுள்ளது.
ஒன்பது மொழிகளில் அவள் நன்றி சொல்லியுள்ளாள், ஐந்து மொழிகளில் பாடல்கள் பாடியுள்ளாள், 12 திருக்குறளுக்கு மேல் கூறியும். மேலும்
ஒன்று முதல் நூறு வரை இறங்கு வரிசையில் எழுதியுள்ளார். இரு பரிணாம படங்கள், முப்பரிமாண படங்களை 42 வினாடிகளில் முடித்துள்ளார். இதெல்லாம் இந்தியன் புக் ஆப் ரெக்கார்டு அங்கீகரித்துள்ளது.
இன்னும் குறைந்த கால நேரத்தில் 7 வயது சிறுமிக்கு நாங்கள் இன்னும் குறைந்த நேரத்தில் சொல்வதற்கு பயிற்சிகள் கொடுத்து வருகிறோம். அதேபோல், கலையில் பரத நாட்டியமும் பயின்று வருகிறாள். இதில் நிறைய முத்திரைகள் உள்ளது. அதில் ஐம்பது விநாடிக்குள் அனைத்து முத்திரைகளையும் சொல்ல வேண்டும் என்றும் கின்னஸ் சாதனைக்கு பயிற்சி அளித்து வருகிறோம். என்னுடைய மகளும் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறுவாள் என்று நம்புகிறேன் என தாயார் கூறினார்.
பொள்ளாச்சி எஸ்.வி நாயுடு வீதியைச் சேர்ந்தவர் வாஞ்சிநாதன் - மீனாட்சி இவர்களின் மகள் வர்ணா (7) 2-ம் வகுப்பு படித்து வருகிறார். சிறுவயது முதல் வேகமாக எழுதக்கூடிய திறமை கொண்ட சிறுமியிடம் துரிதமாக கற்றுக் கொள்ளும் ஆற்றல் இருப்பதை கண்ட பெற்றோர்கள் சிறுமி வர்ணாவின் திறமையை ஊக்குவிக்கும் வகையில் இந்தியா புக் ஆப் ரெக்கார்டுக்கு விண்ணப்பித்தனர்.
வர்ணா நன்றி என்கிற வார்த்தையை 9 மொழிகளில் கூறும், 5 மொழிகளில் மெல்லிய குரலில் பாடல்களைப் பாடும் திறமை, மற்றும் 100யில் இருந்து 1 வரை எண்களை தலைகளாக ஒரு நிமிடத்தில் எழுதிய திறன் கொண்ட மாணவி வர்ணாவின் வீடியோவை அவரது பெற்றோர்கள் இந்தியன் புக் ஆப் ரெக்கார்டுக்கு அனுப்பிவைத்தனர்.
இந்த நிலையில், சிறுமி வர்ணாவின் திறமையை இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் அங்கீகரித்து மாணவி வர்ணாவிற்க்கு இந்தியன் புக் ஆப் ரெக்கார்டு விருது கிடைத்துள்ளது.
இதுகுறித்து மாணவியின் தாயார் மீனாட்சி கூறியதாவது, என்னுடைய மகள் வர்ணா வாஞ்சிநாதன் சாதனை இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்ல் பதிவாகியுள்ளது.
ஒன்பது மொழிகளில் அவள் நன்றி சொல்லியுள்ளாள், ஐந்து மொழிகளில் பாடல்கள் பாடியுள்ளாள், 12 திருக்குறளுக்கு மேல் கூறியும். மேலும்
ஒன்று முதல் நூறு வரை இறங்கு வரிசையில் எழுதியுள்ளார். இரு பரிணாம படங்கள், முப்பரிமாண படங்களை 42 வினாடிகளில் முடித்துள்ளார். இதெல்லாம் இந்தியன் புக் ஆப் ரெக்கார்டு அங்கீகரித்துள்ளது.
இன்னும் குறைந்த கால நேரத்தில் 7 வயது சிறுமிக்கு நாங்கள் இன்னும் குறைந்த நேரத்தில் சொல்வதற்கு பயிற்சிகள் கொடுத்து வருகிறோம். அதேபோல், கலையில் பரத நாட்டியமும் பயின்று வருகிறாள். இதில் நிறைய முத்திரைகள் உள்ளது. அதில் ஐம்பது விநாடிக்குள் அனைத்து முத்திரைகளையும் சொல்ல வேண்டும் என்றும் கின்னஸ் சாதனைக்கு பயிற்சி அளித்து வருகிறோம். என்னுடைய மகளும் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறுவாள் என்று நம்புகிறேன் என தாயார் கூறினார்.