கோவையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைக்கூட்டம்..!
கோவை: கடந்த இரு வாரங்களாக கோவையில்கொரொனா தொற்று அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கடந்த இரு தினங்களாக 600 க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் கண்டறியப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தொடர்ந்து,மாவட்ட, மாநகராட்சி மற்றும் சுகாதாரத்துறை நிர்வாகம் கடுமையான கூட்டு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தும், தொற்று அதிகரித்து வருவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், கோவையில் கொரோனா பரவலை மீண்டும் கட்டுக்குள் கொண்டுவர எடுக்க வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

மாவட்ட கண்காணிப்பு அலுவலர்/ தொழில்துறை அரசு முதன்மை செயலாளர் முருகானந்தம் இ.ஆ.பதலைமையில்நடைபெற்ற இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர், மாநகராட்சி ஆணையர், சுகாதரத்துறை அதிகாரிகள், ஈ எஸ் ஐ, மற்றும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து,மாவட்ட, மாநகராட்சி மற்றும் சுகாதாரத்துறை நிர்வாகம் கடுமையான கூட்டு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தும், தொற்று அதிகரித்து வருவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், கோவையில் கொரோனா பரவலை மீண்டும் கட்டுக்குள் கொண்டுவர எடுக்க வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட கண்காணிப்பு அலுவலர்/ தொழில்துறை அரசு முதன்மை செயலாளர் முருகானந்தம் இ.ஆ.பதலைமையில்நடைபெற்ற இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர், மாநகராட்சி ஆணையர், சுகாதரத்துறை அதிகாரிகள், ஈ எஸ் ஐ, மற்றும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர்கள் கலந்து கொண்டனர்.