கோவை: காந்திபுரம் உணவகத்தில் போலீசார் தாக்குதல் நடத்தியது குறித்து இரண்டு வாரத்தில் பதில் அளிக்கும்படி கோவை மாநகர போலீஸ் கமிஷனருக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
கோவை: காந்திபுரம் உணவகத்தில் போலீசார் தாக்குதல் நடத்தியது குறித்து இரண்டு வாரத்தில் பதில் அளிக்கும்படி கோவை மாநகர போலீஸ் கமிஷனருக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
கோவை காந்திபுரம் பகுதியில் சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட் உள்ளே ராஜா உணவகத்தில் சாப்பிட்டு கொண்டிருந்தவர்களை போலீசார் லத்தியால் தாக்கினர். அதில் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண்ணுக்கு காயம் ஏற்பட்டது.
இந்த சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்கள் வாயிலாக பரப்பரப்பாக வெளியாகி உள்ளது. இந்த நிலையில் இன்று கோவை மாநகர போலீஸ் ஆணையர் டேவிட்சன் ஆசீர்வாதத்திற்கு தமிழ்நாடு மனித உரிமை ஆணையம் சார்பாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
இந்த தாக்குதல் குறித்து இரண்டு வாரத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் துணை ஆணையர் மூலம் இந்த சம்பவம் குறித்து விசாரிப்பதற்கு குழு அமைக்கப்பட்டுள்ளது. அத்துமீறி தாக்குதல் நடத்திய முத்து என்கிற சப்-இன்ஸ்பெக்டர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
கோவை காந்திபுரம் பகுதியில் சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட் உள்ளே ராஜா உணவகத்தில் சாப்பிட்டு கொண்டிருந்தவர்களை போலீசார் லத்தியால் தாக்கினர். அதில் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண்ணுக்கு காயம் ஏற்பட்டது.
இந்த சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்கள் வாயிலாக பரப்பரப்பாக வெளியாகி உள்ளது. இந்த நிலையில் இன்று கோவை மாநகர போலீஸ் ஆணையர் டேவிட்சன் ஆசீர்வாதத்திற்கு தமிழ்நாடு மனித உரிமை ஆணையம் சார்பாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
இந்த தாக்குதல் குறித்து இரண்டு வாரத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் துணை ஆணையர் மூலம் இந்த சம்பவம் குறித்து விசாரிப்பதற்கு குழு அமைக்கப்பட்டுள்ளது. அத்துமீறி தாக்குதல் நடத்திய முத்து என்கிற சப்-இன்ஸ்பெக்டர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.