கோவை: காந்திபுரம் உணவகத்தின் வாடிக்கையாளர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தியதற்கு கோவை மாவட்ட ஓட்டல்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
கோவை: காந்திபுரம் உணவகத்தின் வாடிக்கையாளர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தியதற்கு கோவை மாவட்ட ஓட்டல்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக கோவை மாவட்ட ஓட்டல்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
“தாக்குதல் சம்பவம் நடைபெற்ற உணவகத்தில் மொத்தம் 6 பேர் கூட இல்லை. மேலும் இரவு 10:00 மணிக்கு இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. உணவகங்கள் இரவு 11:00 மணி வரை செயல்படலாம். கடையில் ஐம்பது சதவீதம் அளவுக்கு அமர்ந்து சாப்பிடலாம் என அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
கொரோனா தற்காப்பு நடவடிக்கைகள் காரணமாக பொதுமக்கள் நலன் காக்க 50 சதவிகித இருக்கைகளுடன் செயல்பட்டு வரும் நிலையில்ஓட்டல்கள் தொழில் மிகப்பெரிய சவாலாக உள்ளது.
இந்நிலையில் கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் அருகே உள்ள உணவகத்தில் உணவு உட் கொண்டிருந்த பெண்கள் உள்ளிட்டவர்களை போலீசார் தாக்கிய சம்பவம் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடையே அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
இத்தகைய செயல் பொதுமக்களுக்கு மேலும் அதிருப்தி நிலையை உருவாக்கும். சட்டத்திற்கு விரோதமாக நடந்த இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறோம்.
மேலும், இச்சம்பவம் வியாபரிகளுக்கு மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சாத்தான்குளம் சம்பவம் போல் மீண்டும் ஒரு பெரிய அசம்பாவிதம் நடப்பதற்கு முன், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.” இவ்வாறு கோயம்புத்தூர் ஓட்டல்கள் சங்கத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக கோவை மாவட்ட ஓட்டல்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
“தாக்குதல் சம்பவம் நடைபெற்ற உணவகத்தில் மொத்தம் 6 பேர் கூட இல்லை. மேலும் இரவு 10:00 மணிக்கு இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. உணவகங்கள் இரவு 11:00 மணி வரை செயல்படலாம். கடையில் ஐம்பது சதவீதம் அளவுக்கு அமர்ந்து சாப்பிடலாம் என அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
கொரோனா தற்காப்பு நடவடிக்கைகள் காரணமாக பொதுமக்கள் நலன் காக்க 50 சதவிகித இருக்கைகளுடன் செயல்பட்டு வரும் நிலையில்ஓட்டல்கள் தொழில் மிகப்பெரிய சவாலாக உள்ளது.
இந்நிலையில் கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் அருகே உள்ள உணவகத்தில் உணவு உட் கொண்டிருந்த பெண்கள் உள்ளிட்டவர்களை போலீசார் தாக்கிய சம்பவம் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடையே அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
இத்தகைய செயல் பொதுமக்களுக்கு மேலும் அதிருப்தி நிலையை உருவாக்கும். சட்டத்திற்கு விரோதமாக நடந்த இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறோம்.
மேலும், இச்சம்பவம் வியாபரிகளுக்கு மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சாத்தான்குளம் சம்பவம் போல் மீண்டும் ஒரு பெரிய அசம்பாவிதம் நடப்பதற்கு முன், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.” இவ்வாறு கோயம்புத்தூர் ஓட்டல்கள் சங்கத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.