கோவை: காந்திபுரம் உணவகத்தில் வாடிக்கையாளர்களை போலீசார் தாக்கியதற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
கோவை: காந்திபுரம் உணவகத்தில் வாடிக்கையாளர்களை போலீசார் தாக்கியதற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “கோவை காந்திபுரம் பகுதியில் 11-04-2021 அன்று இரவு 10 மணிக்கு ரோந்து வந்த காந்திபுரம் C1 காவல் நிலைய காவலர்கள் அந்தப் பகுதியில் இருந்த உணவகத்தில் உணவு அருந்திக் கொண்டு இருந்த பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
துணை ஆய்வாளர் முத்து தலைமையில் காவல்துறையினர் பொதுமக்கள், அக்கடையின் ஊழியர்கள் உள்ளிட்டோரை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர்.
கோவை மாநகர காவல்துறையின் இத்தகைய நடவடிக்கை கண்டனத்திற்குரியது. கொரோனா நோய் தொற்று பரவல் விதிகளை மீறி இருந்தால் சட்டபூர்வமான நடவடிக்கை எடுப்பதை விடுத்து, தாக்குதல் நடத்துவது சரியானது அல்ல
தாக்குதல் நடத்திய காவல்துறையினர் மீது வழக்கு பதிந்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பந்தப்பட்ட போலீசாரை இடம் மாற்றம் செய்வது சரியான தீர்வு அல்ல. காவல்துறையினர் மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதை தடுக்கும் விதத்தில் நடவடிக்கை தேவை,” என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கோவை மாவட்ட குழு வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “கோவை காந்திபுரம் பகுதியில் 11-04-2021 அன்று இரவு 10 மணிக்கு ரோந்து வந்த காந்திபுரம் C1 காவல் நிலைய காவலர்கள் அந்தப் பகுதியில் இருந்த உணவகத்தில் உணவு அருந்திக் கொண்டு இருந்த பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
துணை ஆய்வாளர் முத்து தலைமையில் காவல்துறையினர் பொதுமக்கள், அக்கடையின் ஊழியர்கள் உள்ளிட்டோரை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர்.
கோவை மாநகர காவல்துறையின் இத்தகைய நடவடிக்கை கண்டனத்திற்குரியது. கொரோனா நோய் தொற்று பரவல் விதிகளை மீறி இருந்தால் சட்டபூர்வமான நடவடிக்கை எடுப்பதை விடுத்து, தாக்குதல் நடத்துவது சரியானது அல்ல
தாக்குதல் நடத்திய காவல்துறையினர் மீது வழக்கு பதிந்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பந்தப்பட்ட போலீசாரை இடம் மாற்றம் செய்வது சரியான தீர்வு அல்ல. காவல்துறையினர் மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதை தடுக்கும் விதத்தில் நடவடிக்கை தேவை,” என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கோவை மாவட்ட குழு வலியுறுத்தியுள்ளது.