கோவை: காந்திபுரம் உணவகத்தில் வாடிக்கையாளர்களை தாக்கிய போலீசாருக்கு மநீம தலைவர் கமல்ஹாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கோவை: கோவை: காந்திபுரம் உணவகத்தில் வாடிக்கையாளர்களை தாக்கிய போலீசாருக்கு மநீம தலைவர் கமல்ஹாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
காந்திபுரம் உணவகத்தில் போலீசார் நடத்திய தாக்குதலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் உட்பட பலர் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர், கோவை தெற்கு தொகுதி வேட்பாளருமான கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், “இரவு 11 மணியைத் தாண்டி உணவகங்கள் செயல்படக் கூடாது என்பது அரசின் ஆணை. கோவை காந்திபுரத்தில் பத்தரை மணிக்கு முன்னதாகவே போலீஸ் ஒரு உணவகத்தில் புகுந்து அங்கிருந்தவர்களை தாக்குகிறது.
இது சாத்தான்குளம் படுகொலையை நினைவு படுத்துகிறது நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசு நிர்வாகத்தின் கடமை ஆகும்,” என காரசாரமாக பதிவிட்டுள்ளார்.
இந்த நிலையில் காந்திபுரம் உணவகம் தாக்குதல் தொடர்பாக போலீஸ் கமிஷனர் உத்தரவின் பேரில் துணை ஆணையர் விசாரணை தொடங்கி நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
காந்திபுரம் உணவகத்தில் போலீசார் நடத்திய தாக்குதலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் உட்பட பலர் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர், கோவை தெற்கு தொகுதி வேட்பாளருமான கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், “இரவு 11 மணியைத் தாண்டி உணவகங்கள் செயல்படக் கூடாது என்பது அரசின் ஆணை. கோவை காந்திபுரத்தில் பத்தரை மணிக்கு முன்னதாகவே போலீஸ் ஒரு உணவகத்தில் புகுந்து அங்கிருந்தவர்களை தாக்குகிறது.
இது சாத்தான்குளம் படுகொலையை நினைவு படுத்துகிறது நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசு நிர்வாகத்தின் கடமை ஆகும்,” என காரசாரமாக பதிவிட்டுள்ளார்.
இந்த நிலையில் காந்திபுரம் உணவகம் தாக்குதல் தொடர்பாக போலீஸ் கமிஷனர் உத்தரவின் பேரில் துணை ஆணையர் விசாரணை தொடங்கி நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.