கோவை: கிணத்துக்கடவு அருகே கோவில் பாளையத்தில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமில் 100 க்கும் மேற்பட்டோர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
கோவை: கிணத்துக்கடவு அருகே கோவில்பாளையத்தில் நடைபெற்ற கொரானா தடுப்பூசி முகாமில் 100க்கும் மேற்பட்டோர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
கொரோனா தொற்றின் 2-வது அலையின் தாக்கம் கோவை மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ள சுகாதாரத்துறை சார்பில் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
கிணத்துக்கடவு பகுதியில் நேற்று வரை 2 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று கிணத்துக்கடவு அருகே உள்ள கோவில்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

இதில் சுற்றுவட்டார கிராமத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் வந்து கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர். மேலும் கொரோனா தடுப்பூசி போட வந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த முகாமில் கிணத்துக்கடவு வட்டார மருத்துவ அலுவலர் சித்ரா, நல்லட்டிபாளையம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் சமித்தா உள்ளிட்ட சுகாதார துறை சார்ந்த மருத்துவர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர்
கொரோனா தொற்றின் 2-வது அலையின் தாக்கம் கோவை மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ள சுகாதாரத்துறை சார்பில் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
கிணத்துக்கடவு பகுதியில் நேற்று வரை 2 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று கிணத்துக்கடவு அருகே உள்ள கோவில்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
இதில் சுற்றுவட்டார கிராமத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் வந்து கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர். மேலும் கொரோனா தடுப்பூசி போட வந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த முகாமில் கிணத்துக்கடவு வட்டார மருத்துவ அலுவலர் சித்ரா, நல்லட்டிபாளையம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் சமித்தா உள்ளிட்ட சுகாதார துறை சார்ந்த மருத்துவர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர்