நூற்பாலை தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான நூல்கள் எரிந்து நாசம்!

கோவை: கோவை அருகே நூற்பாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான நூல்கள் எரிந்து நாசமாகின.


கோவை: கோவை அருகே நூற்பாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான நூல்கள் எரிந்து நாசமாகின.

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி செந்தில் நகரைச் சேர்ந்த வையாபுரி அப்பன், சாந்தி சைஸ் சிங்மில் என்ற பெயரில் கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக வார்ப்பு நூற்பாலை நடத்தி வருகிறார்.

இவரது நூற்பாலையில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பரவியது. தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அன்னூர், அவிநாசி, பீளமேடு, பல்லடம் ஆகிய பகுதிகளிலிருந்து வந்த 5 தீயணைப்பு வாகனங்கள் பல மணி நேரம் போராட்டத்திற்கு பின்னர் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். எனினும் பலகோடி ரூபாய் மதிப்புள்ள நூல்கள் எரிந்து நாசமாகின.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், “கருமத்தம்பட்டி சோமனூர் பகுதிகளில் நூற்பாலைகள், விசைத்தறி கூடங்கள் அதிக அளவில் உள்ளன. எனவே, இங்கு அடிக்கடி தீ விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே, கருமத்தம்பட்டி பகுதியில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டி கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக கோரிக்கை விடுத்து வருகின்றோம்.

ஆனால், இதுவரை தீயணைப்பு நிலையம் அமைக்கப்படவில்லை. வெளியூர்களில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வருவதற்குள் அதிக அளவில் பொருட்கள் எரிந்து நாசமாகின்றன. எனவே கருமத்தம்பட்டி பகுதியில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்தனர். தீ விபத்து குறித்து கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...