கோவை: கோவையில் சந்தேகத்துக்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த வேனில் ரூ.12.5 லட்சம் மதிப்பிலான பான்மசாலா தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
கோவை: கோவையில் சந்தேகத்துக்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த வேனில் ரூ.12.5 லட்சம் மதிப்பிலான பான்மசாலா தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
கோவை பெரியநாயக்கன்பாளையம் எஸ்.ஐ., செல்வநாயகம் மற்றும் போலீசார், நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே உள்ள மணிகாரம்பாளையம், மவுன்டன் வியூ குடியிருப்பு பகுதியில் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது, அங்கு நிறுத்தப்பட்டிருந்த வேனில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட, 12.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சுமார், 500 கிலோ எடைகொண்ட பான் மசாலா பாக்கெட்கள், 18 அட்டை பெட்டிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, அவற்றை பறிமுதல் செய்தனர். மேலும், இது தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த கங்காதரன்(42) என்பவரை கைது செய்தனர்.
கோவை பெரியநாயக்கன்பாளையம் எஸ்.ஐ., செல்வநாயகம் மற்றும் போலீசார், நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே உள்ள மணிகாரம்பாளையம், மவுன்டன் வியூ குடியிருப்பு பகுதியில் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது, அங்கு நிறுத்தப்பட்டிருந்த வேனில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட, 12.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சுமார், 500 கிலோ எடைகொண்ட பான் மசாலா பாக்கெட்கள், 18 அட்டை பெட்டிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, அவற்றை பறிமுதல் செய்தனர். மேலும், இது தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த கங்காதரன்(42) என்பவரை கைது செய்தனர்.