கோவையில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 52 வயது மதிக்கத்தக்க பெண் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவையில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 52 வயது மதிக்கத்தக்க பெண் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை அன்னூர் அடுத்த விக்ரம் பாளையத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மனைவி சரஸ்வதி (52), இவரது மகன் ராம்குமார் (30).
இந்நிலையில், ராம்குமார் சரஸ்வதியும் மோட்டார் சைக்கிளில் நேற்றுமாலை கோவையிலிருந்து அன்னூர் நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
இதனிடையே, மைல்கல் அருகே மற்றொரு மோட்டார் பைக் நேருக்கு நேர் மோதியது. இதில் ராம்குமாரும் சரஸ்வதியும் படுகாயமடைந்தனர். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி சரஸ்வதி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து, விபத்து ஏற்படுத்திய பைக் ஓட்டுனர் தினேஷ் (25) மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கோவை அன்னூர் அடுத்த விக்ரம் பாளையத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மனைவி சரஸ்வதி (52), இவரது மகன் ராம்குமார் (30).
இந்நிலையில், ராம்குமார் சரஸ்வதியும் மோட்டார் சைக்கிளில் நேற்றுமாலை கோவையிலிருந்து அன்னூர் நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
இதனிடையே, மைல்கல் அருகே மற்றொரு மோட்டார் பைக் நேருக்கு நேர் மோதியது. இதில் ராம்குமாரும் சரஸ்வதியும் படுகாயமடைந்தனர். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி சரஸ்வதி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து, விபத்து ஏற்படுத்திய பைக் ஓட்டுனர் தினேஷ் (25) மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.