கோவை: கோவை காந்திபுரம் பகுதியில் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் திடீரென ஓட்டலுக்குள் சாப்பிட்டுக்கொண்டிருந்த மக்களையும் பொருட்களையும் அடித்து நொறுக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை: கோவை காந்திபுரம் பகுதியில் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் திடீரென ஓட்டலுக்குள் சாப்பிட்டுக்கொண்டிருந்த மக்களையும் பொருட்களையும் அடித்து நொறுக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை காந்திபுரம் காட்டூர் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட சென்ட்ரல் பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வருவது ராஜா ஹோட்டலாகும்.
இந்நிலையில், நேற்று இரவு அங்கு 6க்கும் மேற்பட்ட பயணிகள் சாப்பிட்டு கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் லதா, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்து உட்பட 4 காவலர்கள் ஹோட்டலுக்குள் புகுந்து ஓட்டலை சூறையாடி, பொருட்களை அடித்து நொறுக்கி சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களை லத்தி சார்ஜ் செய்து அடித்து நொறுக்கினர். இதில் நான்குக்கு மேற்பட்டவர்களுக்கு காயம் ஏற்பட்டது. ஒரு பெண்ணிற்கு மண்டை உடைந்தது.
இந்நிலையில், இன்று காலை ஓட்டல் உரிமையாளர் மோகன்ராஜ் கோவை மாநகர காவல்துறை ஆணையர் டேவிட்சன் ஆசீர்வாதம் புகார் மனு அளித்திருந்தார். உடனடியாக புகார் மனுவை பெற்ற ஆணையர் காட்டூர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் முத்துவை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டார்.
மேலும், உடனடியாக உதவி ஆணையர் தலைமையில் விசாரணை செய்து உடனடியாக விசாரணை அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு உள்ளார். அதனால் இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.