பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதற்கு இந்தியன் வங்கி ஊழியர்கள் எதிர்ப்பு!

கோவை: பொதுத்துறை வங்கிகள் தனியார்மயம் ஆக்குவது நல்லதல்ல என இந்தியன் வங்கி ஊழியர் மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.


கோவை: பொதுத்துறை வங்கிகள் தனியார்மயம் ஆக்குவது நல்லதல்ல என இந்தியன் வங்கி ஊழியர் மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்தியன் வங்கி ஊழியர் சங்கத்தின் 18 வது தமிழ் மாநில மாநாடு மாநில தலைவர் எஸ்.அரிராவ் கோவையில் இரண்டு நாட்கள் நடைபெற்றது.

மாநாட்டு தீர்மானங்கள் குறித்து சங்கத்தின் மாநில செயலாளர் க.கிருட்டிணன் முன்மொழிந்தார். தீர்மானங்களில் கூறப்பட்டிருப்பதாவது;

“மக்கள் சேமிப்பிற்கு பாதுகாப்பு உத்தரவாதம் அளிப்பது அரசின் பொதுத்துறை வங்கிகள் மட்டும்தான். எனவே மத்திய அரசு பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும்.

பொதுத்துறை வங்கிகள் தனியார்மயமாக்கல் நடவடிக்கையை எதிர்த்து சமரசமற்ற போராட்டத்தை முன்னெடுப்பு,வங்கிகளில் உள்ள அனைத்து காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். இந்தியன் வங்கிகளில் பணியாற்றும் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்திட வேண்டும்.



விஞ்ஞான பூர்வமான மாற்றல் கொள்கையை உருவாக்க வேண்டும். கொரோனா களத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு உயிர் பாதுகாப்பு கவசங்களை அளிக்க வேண்டும்.” இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டில் இந்தியன் வங்கி ஊழியர் சங்க தமிழ் மாநில தலைவராக சுனில் குமார், பொதுச்செயலாளராக ரமேஷ்குமார் மற்றும் பொருளாளராக ஆறுமுகம் ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் தமிழ்நாடு பொதுச்செயலாளர் என்.ராஜகோபால், சிஐடியு மாநில செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, இந்தியன் வங்கி ஊழியர் சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் ரஞ்சன் ராஜ், அலகாபாத் வங்கி ஊழியர் தலைவர் சஞ்சய் குமார் ஆகியோர் உரையாற்றினார். முன்னதாக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கத்தின் மாநில கௌரவ தலைவர் எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் பண்பாடு, கல்வி, பள்ளி என்ற தலைப்பில் கருத்துரையாற்றினார்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...