இந்து முன்னணி துணைத்தலைவர் மீது மர்ம நபர்கள் தாக்குதல்! - இந்து முன்னணியினர் கண்டனம்

கோவை: கோவை மாவட்டம் போத்தனூர் பகுதி சங்கம் வீதியில் நேற்றிரவு இந்து முன்னணியின் உக்கடம் நகர துணைத்தலைவர் ராமகிருஷ்ணன் என்பவர் மர்ம நபர்கள் சிலரால் தாக்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.



கோவை: கோவை மாவட்டம் போத்தனூர் பகுதி சங்கம் வீதியில் நேற்றிரவு இந்து முன்னணியின் உக்கடம் நகர துணைத்தலைவர் ராமகிருஷ்ணன் என்பவர் மர்ம நபர்கள் சிலரால் தாக்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து போத்தனூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.



இந்நிலையில், இன்று பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், கோவை அரசு மருத்துவமனைக்கு சென்று ராமகிருஷ்ணனை நலம் விசாரித்தார்.



பின்னர், பத்திரிக்கையாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது: நேற்று நடந்த தாக்குதலை போலவே சில நாட்களுக்கு முன்பு பாஜக நிர்வாகிகள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன. நேற்று நடந்த தாக்குதலுக்கு இதுவரை யாரையும் காவல்துறையினர் கைது செய்யவில்லை. தேர்தலுக்காக பல்வேறு பணிகளை மேற்கொண்டவர் மீது தாக்குதல் நடந்திருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது.

இந்த தாக்குதல் சம்பவம் குறித்து இந்து முன்னணி நிர்வாகிகள் காவல்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியரை சந்திக்க உள்ளனர். இது போன்ற சம்பவங்கள் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும். இதனை தடுப்பதற்கு உடனடியாக காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.



அதனை தொடர்ந்து, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக இந்து முன்னணியினர் கூட்டமாக திரண்டனர்.



பதற்ற சூழ்நிலையை தவிர்க்கும் விதமாக காவல்துறையினர் மற்றும் துணை ராணுவ படையினர் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டனர்.

பின்னர், அங்கு வந்த இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் பத்திரிகையாளர்களிடம் பேசியதாவது:



உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள வந்த போது, பெரிய கலவரத்தை உருவாக்க பலர் திட்டமிட்டனர். அதற்கான வீடியோ ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது.

இது போன்ற தொடர் சம்பவங்களை காவல்துறையினர் கண்டிக்காவிட்டால் அவற்றை ஊக்கப்படுத்தும் விதமாக அது அமைந்துவிடும். நேற்றைய சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்டதாகும். காவல்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் தொடர்ந்து சாதி மத கலவரங்களை நிகழ்த்த பலர் திட்டமிட்டுள்ளனர். இதில் சீனா, பாகிஸ்தான் போன்ற பல வெளிநாடுகளின் சதிகளும் உள்ளன. உளவுத்துறையினர் கூர்ந்து கண்காணித்து அவற்றை முன்கூட்டியே தடுக்க வேண்டும்.

இவ்வாறு பேசிய அவர், இந்து முன்னணி இயக்கத்தை சேர்ந்த தொண்டர்களுடன் கூட்டமாக சென்று கோவை மாவட்ட கமிஷனரிடம் தாக்குதல் சம்பவம் குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு புகார் அளித்தார்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...