கோவை துடியலூர் பகுதியில் திரையரங்கம்‌ மற்றும்‌ பல்வேறு பகுதிகளில்‌ கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்‌ குறித்து மாநகராட்சி ஆணையர் ஆய்வு!

கோவை: கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம்‌ துடியலூரில்‌ செயல்பட்டுவரும்‌ தனியார்‌ சினிமா திரையரங்கம்‌ மற்றும்‌ ஆர்‌.எஸ்‌.புரம்‌ உழவர்‌ சந்தையில்‌ கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்‌ குறித்து மாநகராட்சி துணை ஆணையாளர்‌ ச.மதுராந்தகி அவர்கள்‌ இன்று நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


கோவை: கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம்‌ துடியலூரில்‌ செயல்பட்டுவரும்‌ தனியார்‌ சினிமா திரையரங்கம்‌ மற்றும்‌ ஆர்‌.எஸ்‌.புரம்‌ உழவர்‌ சந்தையில்‌ கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்‌ குறித்து மாநகராட்சி துணை ஆணையாளர்‌ ச.மதுராந்தகி அவர்கள்‌ இன்று நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கோவை மாநகராட்சி ஆர்‌.எஸ்‌.புரம்‌ உழவர்‌ சந்தை மற்றும்‌ வடக்கு மண்டலம்‌ துடியலாரில்‌ செயல்பட்டுவரும்‌ தனியார்‌ சினிமா திரையரங்கம்‌ மற்றும்‌ பல்வேறு பகுதிகளில்‌ கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்‌ குறித்து ஆய்வு மேற்கொண்ட மாநகராட்சி துணை ஆணையாளர்‌ அவர்கள்‌, ஆர்‌.எஸ்‌.புரம்‌ உழவா்‌ சந்தையில்‌ முகக்கவசம்‌ அணியாமல்‌ இருந்த 27 நபர்களுக்கு தலா ரூ.200 வீதம்‌ அபராதம்‌ விதிக்க உத்தரவிட்டார்.



பின்னர்‌, துடியலூரில்‌ செயல்பட்டுவரும்‌ தனியார்‌ திரையரங்கத்தில்‌ பொதுமக்கள்‌ முகக்கவசம்‌ அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்கின்றார்களா என ஆய்வு மேற்கொண்ட பின்னர்‌, துடியலூரில்‌ செயல்பட்டுவரும்‌ நகாப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில்‌ பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுவருதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



தொடர்ந்து, சத்தி சாலையில்‌ செயல்பட்டுவரும்‌ தனியார்‌ மாலில்‌ வாடிக்கையாளா்கள்‌ முகக்கவசம்‌ அணிந்து, சமூக இடைவெளியை

கடைபிடிக்கின்றார்களா, மாலிற்கு வரும்‌ வாடிக்கையாளர்களுக்கு வெப்பமானியைக்‌ வெப்ப அளவு பரிசோதனை செய்யப்படுகின்றதா என ஆய்வு செய்த பின்னர்‌, அந்த மாலில்‌ செயல்பட்டுவரும்‌ திரையரங்கத்திற்கு சென்று பொதுமக்கள்‌ முகக்கவசம்‌ அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்கின்றார்களா என ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்‌ போது நகர்நல அலுவலர்‌ மரு.ராஜா, வடக்கு மண்டல உதவி ஆணையர்‌ மகேஷ்‌ கனகராஜ்‌, மண்டல சுகாதார அலுவலர்‌ இராமச்சந்திரன்‌, மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ ஆகியோர்‌ உடனிருந்தனர்‌.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...