நீலகிரி: உதகை அருகே இரண்டு வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த குற்றவாளிக்கு 18 ஆண்டுகள் சிறை தண்டனை 1 லட்சம் அபராதம் விதித்து உதகை மகிளா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.
நீலகிரி: உதகை அருகே இரண்டு வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த குற்றவாளிக்கு 18 ஆண்டுகள் சிறை தண்டனை 1 லட்சம் அபராதம் விதித்து உதகை மகிளா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.
கடந்த 2018ம் ஆண்டு உதகை அருகே சோகத்தொரை எதுமகண்டிப் பகுதியில் கோபாலகிருஷ்ணன் என்பவன் அதே பகுதியில் உள்ள 2 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளான்.

இதையடுத்து, அச்சிறுமியின் பாட்டி உதகை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். இச்சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை உதகை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், இன்று வழக்கை விசாரித்த நீதிபதி சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த கோபால கிருஷ்ணனுக்கு 18 ஆண்டுகள் சிறை தண்டனையும் ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அபராதத் தொகை செலுத்தாத பட்சத்தில் மேலும் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
கடந்த 2018ம் ஆண்டு உதகை அருகே சோகத்தொரை எதுமகண்டிப் பகுதியில் கோபாலகிருஷ்ணன் என்பவன் அதே பகுதியில் உள்ள 2 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளான்.
இதையடுத்து, அச்சிறுமியின் பாட்டி உதகை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். இச்சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை உதகை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், இன்று வழக்கை விசாரித்த நீதிபதி சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த கோபால கிருஷ்ணனுக்கு 18 ஆண்டுகள் சிறை தண்டனையும் ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அபராதத் தொகை செலுத்தாத பட்சத்தில் மேலும் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.