வால்பாறை நகருக்குள் சிறுத்தை நடமாட்டத்தால் மக்கள் அச்சம்!

வால்பாறை: வால்பாறை நகருக்குள் சிறுத்தை நடமாடுவதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.


வால்பாறை: வால்பாறை நகருக்குள் சிறுத்தை நடமாடுவதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறையில் ஆனைமலை புலிகள் காப்பகம் உள்ளது. இங்கு ஏராளமான புலி, சிறுத்தை, கரடி யானை போன்ற வனவிலங்குகள் உள்ளன.

காட்டுக்குள் இருக்கும் வனவிலங்குகள் அடிக்கடி மக்கள் குடியிருக்கும் பகுதிக்கு வந்து வீட்டில் இருக்கும் பொருட்களை சேதப்படுத்துகின்றன. இது தவிர மனிதர்கள் மீது பாய்ந்து படு காயப்படுத்துவதும், சில நேரங்களில் வனவிலங்குகளால் தாக்கப்பட்டு சிலர் உயிரிழப்பது தொடர்கதையாக இருக்கிறது.

இது தவிர குடியிருப்பு பகுதிக்கு வரும் சிறுத்தை நாய், ஆடு, மாடு, கோழி போன்ற வீட்டு விலங்குகளையும் அடித்துக் கொன்று தின்கிறது.



இந்நிலையில் வால்பாறையின் முக்கிய பகுதியான வாழைத்தோட்டம் பிரதான சாலையில் நள்ளிரவில் சிறுத்தை ஒன்று நடமாடியதை காரில் வந்தவர்கள் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார்கள்.

இச்சம்பவம் வால்பாறை நகரில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது. வனத்துறையினர் தகுந்த ரோந்து பணிகளை மேற்கொண்டு சிறுத்தை நடமாட்டத்தை கண்டுபிடித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...